Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பொட்டு சுரேஷ் கொலையில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு? அட்டாக் பாண்டி பரபரப்பு தகவல்

Go down

பொட்டு சுரேஷ் கொலையில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு? அட்டாக் பாண்டி பரபரப்பு தகவல் Empty பொட்டு சுரேஷ் கொலையில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு? அட்டாக் பாண்டி பரபரப்பு தகவல்

Post by oviya Fri Sep 25, 2015 2:14 pm

பொட்டு சுரேஷ் கொலையில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து அட்டாக் பாண்டி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் அட்டாக் பாண்டி மும்பையில் கைது செய்யப்பட்டார்.

மதுரை ஆயுதப்படை மைதான வளாகத்தில், அவரிடம் நேற்று விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், திமுக ஆட்சியின்போது எனது வேளாண் விற்பனைக் குழு தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதற்கு பொட்டு சுரேஷ்தான் காரணம்.

இது எனக்கு அரசியல் ரீதியாகப் பின்னடைவை ஏற்படுத்தியது. இழந்த இடத்தை மீண்டும்பெற பகீரத முயற்சி எடுத்தபோதும், பொட்டு சுரேஷ் தடுத்துவிட்டார்.

2011 சட்டப் பேரவை தேர்தலில் திமுக தோல்வியடைந்த பின்னர் அழகிரியிடம் பொட்டு சுரேஷ் செல்வாக்கு குறைந்தது.

பின்னர் மீண்டும் கட்சியினருக்கு பதவி பெற்றுத்தருவது உட்பட அனைத்து விஷயங்களிலும் அவரது செல்வாக்கு தொடர்ந்து வளர்ந்தது.

கீரைத்துறை பகுதியில் உள்ள நூறுக்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உட்பட பல தரப்பில் இருந்தும் எனக்கு மாமூல் கிடைக்கும்.

இப்பகுதியில் ஜெயம் பைனான்ஸ் என்ற பெயரில் செயல்பட்ட நிதி நிறுவனம் மக்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்ய திட்டமிட்ட தகவல் தெரிந்தது.

எனவே நிதி நிறுவன நிர்வாகி அசோக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதைக் கைப்பற்றினேன்.

இப்பிரச்சனையை பொட்டு சுரேஷிடம் அசோக் கொண்டு சென்றதால் அசோக்கிடம் பணத்தை பெற்ற பொட்டு சுரேஷ், பொலிஸ் மூலம் என்னை மிரட்டினார்.

அசோக்கை கடத்தியதாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, என்னை செயல்பட விடாமல் முடக்கி, நிதி நிறுவனத்தை கைப்பற்றினார்.

இச்சம்பவம் என்னை மனதளவில் மிகவும் பாதித்ததுடன் பண வருவாயை தடுத்தது.

நான் பொட்டு சுரேஷ் மீது மிகுந்த அதிருப்தியில் இருந்த தகவல் அவருக்கும் தெரிந்தது.

எனது நெருங்கிய உறவினர் திருச்செல்வத்துடன் எனக்கு இருந்த குடும்பப் பிரச்சனையை அறிந்த பொட்டு சுரேஷ் என்னை தீர்த்துக்கட்ட முயற்சித்தது தெரிந்தது.

இதை அறிந்த எனது ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டார்.

அழகிரியிடம் என்னை நெருங்கவிடாமல் பொட்டு சுரேஷ் தடுத்ததால் 2012 டிசம்பரில் மு.க.ஸ்டாலினை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, அவரது ஆதரவாளராக மாறினேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பொட்டு சுரேஷ் கொலைக்கு முன் இது குறித்த தகவல் ஸ்டாலினுக்கோ, அழகிரிக்கோ தெரிய வாய்ப்பில்லை என அட்டாக் பாண்டி விசாரணையில் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum