Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சாவுக்கு யார் காரணம்? தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியாவின் கடைசி கடிதத்தில் பரபரப்பு தகவல்கள்

Go down

சாவுக்கு யார் காரணம்? தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியாவின் கடைசி கடிதத்தில் பரபரப்பு தகவல்கள் Empty சாவுக்கு யார் காரணம்? தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியாவின் கடைசி கடிதத்தில் பரபரப்பு தகவல்கள்

Post by oviya Sat Sep 19, 2015 1:57 pm

தமிழகத்தில் டிஎஸ்பியாக பதவியேற்று ஏழே மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியா எழுதிய கடிதம் சிக்கியுள்ளது.
திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் ஆர்.விஷ்ணுபிரியா(27), திருமணமாகாதவர்.

இவரது தந்தை ரவி, கடலூரைச் சேர்ந்த விஷ்ணுபிரியா பி.எஸ்சி. கணிதத்தில் பட்டம் பெற்றவர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய்த் துறையில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த 2014-ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று, சிவகங்கையில் பயிற்சி முடித்து கடந்த பிப்ரவரி மாதம், 1-ஆம் திகதி திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், திருச்செங்கோடு டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தகவலறிந்த சேலம் சரக டிஐஜி வித்யா குல்கர்னி, நாமக்கல் எஸ்.பி. எஸ்.ஆர்.செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அங்கிருந்து ஆங்கிலத்தில் 10 பக்கங்களுக்கு விஷ்ணுபிரியா எழுதிய கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.

அதில், என் சாவுக்கு யாரும் காரணமில்லை. கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணைக்கும், எனது இந்த முடிவுக்கும் தொடர்புபடுத்த வேண்டாம்.

எனது இறப்பை அரசியலாக்கிவிட வேண்டாம், காவல் துறை பணியை தெய்வத்துக்கு இணையாகக் கருதினேன், ஆனால் எனக்குதான் தகுதியில்லை.

பணியால் ஏற்படும் மன உளைச்சலை என்னால் தாங்க முடியவில்லை, என் உடலை உடல்கூறு பரிசோதனை செய்யாமல் பெற்றோரிடம் கொடுத்துவிடவும் என்று எழுதப்பட்டிருந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிகாரி காரணமா?

இந்நிலையில் இவரது மரணத்திற்கு உயரதிகாரி தான் காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சக அதிகாரிகள் முன்னாலேயே மன உளைச்சல் ஏற்படும் வகையில் அந்த அதிகாரி பேசுவாராம். இதுகுறித்து சக அதிகாரிகளிடம் தெரிவித்து விஷ்ணுபிரியா வேதனைப்பட்டுள்ளார்.

நேற்று திருச்செங்கோட்டில் மாணவர்கள், ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை சமாதானப்படுத்தி விட்டு, சாப்பிட சென்ற போது உயரதிகாரி ஒருவர் செல்போனில் பேசியுள்ளார். அதன்பிறகே அவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அவரது செல்போன் நம்பருக்கு கடைசியாக பேசிய அதிகாரி யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விஷ்ணுபிரியாவுக்கு அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்ததாகவும், தனக்கு திருமணம் வேண்டாம் என விஷ்ணுபிரியா கூறி வந்ததாகவும் தெரிகிறது.

இதனால் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum