Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கணவரை கொன்று உடலை எரித்த மனைவி: காரணம் என்ன?

Go down

கணவரை கொன்று உடலை எரித்த மனைவி: காரணம் என்ன? Empty கணவரை கொன்று உடலை எரித்த மனைவி: காரணம் என்ன?

Post by oviya Mon Sep 14, 2015 3:15 pm

நெல்லையில் தினமும் குடிபோதையில் அடித்து உதைத்த கணவரை மனைவி கொன்று உடலை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை தச்சநல்லூர் பாலாமடையைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன் (30). இவருக்கு மல்லிகா (24)என்ற மனைவியும் வெற்றிவேல் (4), சக்திவேல் (3). என்ற மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை உடல் கருகிய நிலையில் சிவராமகிருஷ்ணன் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக மல்லிகா, தனது கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிசாரிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பொலிசார் விசாரணை நடத்தினர். வீட்டின் வாசலில் ரத்தம் படிந்திருந்த மரக்கட்டையை அவர்கள் கைப்பற்றினர்.

இதனால் சந்தேகமடைந்த பொலிசார் சிவராமகிருஷ்ணனின் மனைவி மல்லிகா, மாமனார் வெள்ளக்கண்ணு, மைத்துனர் மாரிச்செல்வம் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சிவராமகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக பொலிசில் மல்லியா அளித்த வாக்குமூலத்தில், கணவர் சிவராமகிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்துவார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் அடித்து துன்புறுத்தியதால் எனது அப்பாவை அழைத்து வந்தேன். உனது தந்தையை எப்படி கூப்பிட்டு வரலாம் என்று கூறி என்னை மீண்டும் அடிக்க வந்தார்.

இதனால் அருகில் கிடந்த கட்டையை எடுத்து கணவரை தாக்கினோம். இதில் அவர் இறந்துவிட்டார். அவரது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்தோம்.

வெளியில் தெரியாமல் இருப்பதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்று நாடகமாடினோம் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum