Top posting users this month
No user |
வேலூர் மத்திய சிறையில் திடீர் சோதனை: மொபைல் பொட்டலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிசார்
Page 1 of 1
வேலூர் மத்திய சிறையில் திடீர் சோதனை: மொபைல் பொட்டலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிசார்
வேலூர் மத்திய சிறைக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் பொட்டலம் கைப்பற்றப்பட்டதையடுத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது.
இங்கு விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் உட்பட 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையினுள் செல்போன், கஞ்சா, புகையிலை, சிகரெட் போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்கள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கைதி ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடைபெற்ற சோதனையில் 2 செல்போன்கள், சார்ஜர்கள் மற்றும் எலக்ட்ரானிக் கருவிகள் இருந்த பொட்டலம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து சிறை அலுவலர் தாமரைசெல்வன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாகாயம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடைசெய்யப்பட்ட பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படும் சம்பவம் சிறை காவலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது.
இங்கு விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் உட்பட 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையினுள் செல்போன், கஞ்சா, புகையிலை, சிகரெட் போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்கள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கைதி ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடைபெற்ற சோதனையில் 2 செல்போன்கள், சார்ஜர்கள் மற்றும் எலக்ட்ரானிக் கருவிகள் இருந்த பொட்டலம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து சிறை அலுவலர் தாமரைசெல்வன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாகாயம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடைசெய்யப்பட்ட பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படும் சம்பவம் சிறை காவலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum