Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சர்வதேச விசாரணை தேவையில்லை: பிள்ளையான்

Go down

சர்வதேச விசாரணை தேவையில்லை: பிள்ளையான் Empty சர்வதேச விசாரணை தேவையில்லை: பிள்ளையான்

Post by oviya Sun Sep 06, 2015 1:31 pm

சர்வதேச விசாரணையொன்று இலங்கைக்கு தேவையில்லையென்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தலைமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்றது. போரென்றால் அங்கு ஈவிரக்கம் என்ற பேச்சுக்கு இடமில்லையென்பதை போராளியாக இருந்தவன் என்ற அடிப்படையில் கூறுகின்றேன்.

விடுதலைப் புலிகளும் மிகப்பெரும் குற்றங்களை செய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தினையே அழித்துள்ளனர். பெருமளவானோரை படுகொலை செய்துள்ளார்கள். எங்களுக்கு சாதகமானோரை கொன்றொழித்துள்ளார்கள்.

இந்த நாட்டில் விடுதலைப:புலிகள் அழிந்த பின்னர்தான் ஒரு சமாதானம் நிம்மதிவரும் என்று நாங்களும் உறுதியாக நம்பினோம். ஆனால் அந்த யுத்தத்தின்போது தமிழ் மக்கள் கேடயமாக பயன்படுத்தப்பட்டு அழிந்தது வேதனையான விடயம்.

யுத்த காலப்பகுதியில் கொத்துக்கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது நாங்கள் சரத்பொன்சேகாவிடம் பசில் ராஜபக்ஸவிடம் இந்திய உயர்ஸ்தானிகரிடம் எல்லாம் இதனை நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறு கூறியிருந்தோம்.

நாங்கள்தான் திருகோணமலையில் கப்பல் மூலம் காயப்பட்டுவந்தவர்களை காப்பாற்றி மருத்துவ உதவிகள் வழங்கினோம்.இது வேதனையான விடயம்.

இதனை சிங்கள இராணுவம் செய்தது என்பதற்கு அப்பால் அதற்கான சந்தர்ப்பத்தினை தமிழர்கள்தான் வழங்கினார்கள்.

இந்த அழிவுகள் எதிர்காலத்தில் வராமல் தடுக்க வேண்டுமேயொழிய இது தொடர்பில் ஒருசாராரை மட்டும் தூக்கிலிட வேண்டும் என்பதில் நான் மாற்றுக்கருத்து கொண்டவன்.

தற்போது உள்ள சூழலில் விசாரணையொன்று நடைபெற்று அறிக்கை வந்துள்ளது.உள்நாட்டு பொறிமுறையூடாக சிங்கள மக்கள் மத்தியில் குரோதம் வளராத வண்ணம் தமிழர்களுக்கு தீர்வு வழங்கவேண்டும் என அனைவரும் கருதுகின்றனர்.

இந்த எண்ணத்தினை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு தற்போதைய எதிர்க்கட்சி தலைவருக்கு வந்துள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை பொறுத்தவரையில் சர்வதேச விசாரணை தேவையற்ற ஒன்றாகவே பார்க்கின்றோம்.

இங்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு பல அறிக்கைகள் வந்துள்ளது.காணாமல்போனவர்கள் தொடர்பிலான அறிக்கைகள் வந்துள்ளது.

அதேபோன்று தற்போதைய ஆட்சிமாற்றத்தில் கடந்த கால ஆட்சியாளர்கள் ஓரங்கட்டப்பட்டு தற்போது உள்ள ஆட்சியாளர்கள் உள்ளக விசாரணைமூலம் தீர்வினைப்பெற்றுக்கொடுப்போம் என்று உறுதியளித்துள்ளனர்.இதுதான் எதிர்காலத்தில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பாகும்.

இந்த நாட்டில் உள்ள அரசியல் பிரச்சினைகளின் அடிப்படையிலேயே இன்றை எதிர்க்கட்சி தலைவர் நியமனத்தினை நான் பார்க்கின்றேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை எப்படியெல்லாம் எமாற்றியுள்ளது என்பதை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு மாயைகாட்டி தமிழ் மக்களிடம் வாக்குகளைப் பெற்றுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழீழத்தினைப் பெற்றுக் கொடுக்காவிட்டாலும் சமஸ்டியையாவது பெற்றுக்கொடுத்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.

தமிழர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்தபோது இதற்குத்தான் தமிழர்கள் அலைந்தார்கள் என்ற மாயை ஏற்படுத்தப்படுகின்றது. 77ஆம்ஆண்டு அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக வந்த நிலைமைவேறு இன்றைய நிலைமைவேறு.

சர்வதேச விசாரணை மற்றும் சமஸ்டியெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் பதவியோடு முடிந்துவிடும் நிலைமை தொடர்பான ஒரு தோற்றப்பாடு இன்று தெரிவதை காணமுடிகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை இயக்கும் கட்சி தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குவேட்டைசெய்துள்ளது. இவர்கள் சாணக்கியம் உள்ளவர்களானால் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையை கொண்டுள்ள இவர்கள் ஆட்சி அதிகாரத்தினை பிடித்திருக்க வேண்டும்.

இன்று ஒரு நல்ல சூழல் கனிந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்க்குமானால் நாங்கள் இந்த அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு தயாராகவுள்ளோம்.

என்னைப் பொறுத்தவரையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ஒரு நல்ல யுத்த வீரன். தமிழ் மக்களுடன் இருந்து போராடினார்.

நாங்களும் அவருடன் இருந்து அவருக்கு மரியாதை செய்துள்ளோம். மண்டியிட்டு மடியக்கூடாது என்று கருதுபவர். நான் கூட அந்த களத்தில் இருந்திருந்தால் நான் என்னை அழித்துக் கொண்டிருப்பேன்.

அதனைப்போன்றே அவர் தன்னை அழித்திருக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எங்களை புறக்கணித்து வருவதனால் தொடர்ந்து அவர்களுடன் இயங்கமுடியா நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாங்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம். அதற்கு பதில் கிடைக்காத சந்தர்ப்பத்தில் அவர்களுடன் இயங்கமுடியாத நிலையே ஏற்படும்.

எதிர்வரும் பிரதேசசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனித்து தமது படகுச்சின்னத்திலேயே போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum