Top posting users this month
No user |
வீலர் தீவுக்கு கலாம் பெயர்: ஒடிஸா மாநில அரசு அறிவிப்பு
Page 1 of 1
வீலர் தீவுக்கு கலாம் பெயர்: ஒடிஸா மாநில அரசு அறிவிப்பு
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மீது கொண்டுள்ள மரியாதை நிமித்தமாக ஒடிசாவில் உள்ள வீலர் தீவுக்கு கலாம் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஒடிஸா மாநிலம், பத்ரக் மாவட்டத்தில் உள்ள, ராக்கெட் மற்றும் ஏவுகணை தளமாக உள்ள வீலர் தீவுக்கு, கலாம் தீவு என்று பெயர் சூட்டி, அந்த மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், புவனேசுவரத்தில் தெரிவிக்கையில், மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் மீது ஒடிஸா மாநில மக்கள் மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர் என்றார்.
மேலும் அவரின் நினைவாக வீலர் தீவு இனிமேல் கலாம் தீவு என்ற பெயரில் அழைக்கப்படும் என தெரிவித்தார்.
கடந்த 1993-ம் ஆண்டில் விஞ்ஞானியாக இருந்த அப்துல் கலாம், கேட்டுக் கொண்டதற்கிணங்க ராக்கெட் ஆராய்ச்சி பயன்பாட்டுக்காக வீலர் தீவை தமது தந்தையும்,
அன்றைய முதல் அமைச்சருமான பிஜு பட்நாயக் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ஒதுக்கீடு செய்தார் என்றும் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
இதனிடையே முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் மறைந்த 40ஆம் நாள் நிகழ்வு நேற்று ராமேஸ்வரத்தில் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள முகைதீன் ஆண்டவர் தொழுகை பள்ளிவாசலில் ‘தமாம்’ எனும் தொழுகை நடத்தப்பட்டது.
இந்த தொழுகையில் கலாமின் சகோதரர் முகம்மது முத்து மீரா மரைக்காயர், பேரன்கள் ஷேக் தாவுத், ஷேக் சலீம், கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ்,
சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் கார்திகேயன், திரைப்பட நடிகர்கள் ராகவா லாரன்ஸ், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.
ஒடிஸா மாநிலம், பத்ரக் மாவட்டத்தில் உள்ள, ராக்கெட் மற்றும் ஏவுகணை தளமாக உள்ள வீலர் தீவுக்கு, கலாம் தீவு என்று பெயர் சூட்டி, அந்த மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், புவனேசுவரத்தில் தெரிவிக்கையில், மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் மீது ஒடிஸா மாநில மக்கள் மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர் என்றார்.
மேலும் அவரின் நினைவாக வீலர் தீவு இனிமேல் கலாம் தீவு என்ற பெயரில் அழைக்கப்படும் என தெரிவித்தார்.
கடந்த 1993-ம் ஆண்டில் விஞ்ஞானியாக இருந்த அப்துல் கலாம், கேட்டுக் கொண்டதற்கிணங்க ராக்கெட் ஆராய்ச்சி பயன்பாட்டுக்காக வீலர் தீவை தமது தந்தையும்,
அன்றைய முதல் அமைச்சருமான பிஜு பட்நாயக் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ஒதுக்கீடு செய்தார் என்றும் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
இதனிடையே முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் மறைந்த 40ஆம் நாள் நிகழ்வு நேற்று ராமேஸ்வரத்தில் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள முகைதீன் ஆண்டவர் தொழுகை பள்ளிவாசலில் ‘தமாம்’ எனும் தொழுகை நடத்தப்பட்டது.
இந்த தொழுகையில் கலாமின் சகோதரர் முகம்மது முத்து மீரா மரைக்காயர், பேரன்கள் ஷேக் தாவுத், ஷேக் சலீம், கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ்,
சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் கார்திகேயன், திரைப்பட நடிகர்கள் ராகவா லாரன்ஸ், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum