Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வயிற்று வலி குறைய

Go down

வயிற்று வலி குறைய           Empty வயிற்று வலி குறைய

Post by oviya Sat Sep 05, 2015 12:39 pm

அறிகுறிகள்:
மாதவிடாய் வயிற்று வலி.
மலச்சிக்கல்.
தேவையான பொருள்கள்:
கருஞ்சீரகம்.
சீரகம்.
வெந்தயம்.
அருநெல்லிக்காய்.
ஜாதிக்காய்.
இளநீர்.
பால்.
மோர்.
தேன்.
செய்முறை:
கருஞ்சீரகத்தை தண்ணீர் ஊற்றி பிசைந்து கழுவி கொள்ளவும். பிறகு அதில் 500 மி.லி இளநீரை ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு கருஞ்சீரகத்தை நிழலில் உலர்த்தி கொள்ளவும்.
சீரகத்தை தண்ணீர் ஊற்றி பிசைந்து கழுவி கொள்ளவும். பிறகு அதில் 200மி.லி பாலை ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு சீரகத்தை நிழலில் உலர்த்தி கொள்ளவும்.
வெந்தயத்தை தண்ணீர் ஊற்றி பிசைந்து கழுவி கொள்ளவும். பிறகு அதில் 200 மி.லி மோரை ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு வெந்தயத்தை நிழலில் உலர்த்தி கொள்ளவும்.
அருநெல்லிக்காயை புதிதாக கொண்டு வந்து கொட்டையை நீக்கி கொள்ளவும். சதை பகுதியை மண் தட்டில் போட்டு உலர்த்தவும்.
ஜாதிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி பிறகு இடித்து 200 மி.லி இளநீரை ஊற்றி 3 மணி நேரம் மூடி ஊற வைத்து அடுப்பில் வைத்து இளநீர் சுண்டும் வரை எரித்து பிறகு நிழலில் உலர்த்தவும்.
பிறகு எல்லா சரக்குகளையும் ஒன்றாக போட்டு நன்றாக இடித்து மல்லிய துணியில் சலித்து கொள்ளவும். கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
இந்த மருந்தை காலை உணவுக்கு 1 மணி நேரம் முன் அரை தேக்கரண்டி தூளை 2 தேக்கரண்டி தேனில் குழைத்து சாப்பிட்டு வரவும். இதை போலவே மாலையும் சாப்பிட்டு வரவும்.
மாதவிடாய் நாட்கள் தவிர பிற நாட்களில் 40 நாட்கள் அல்லது 60 நாட்கள் இந்த மருந்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி குறையும்.
சாப்பிட கூடாத உணவுகள்:
உருளைக்கிழங்கு, கடலை வகைகள், கடலைப்பருப்பு, மொச்சை, முற்றிய காய்கள், எண்ணெய் பலகாரங்கள், மாமிச உணவுகள் ஆகியவை சாப்பிட கூடாது.
சாப்பிட கூடியவை:
புழுங்கலரிசி சாதம், இளங்காய்கள், கீரைகள், தயிர், மோர், பால், நெய், நல்லெண்ணெய், மிளகு, சீரகம், பூண்டு,கடுகு, கோதுமை, தேன், பழங்கள், எலுமிச்சை பழம், ஆறிய வெந்நீர், சோற்றுப்பு ஆகியவை சாப்பிட கூடியவை.
குறிப்பு:
இந்த மருந்தை உண்ணும் நாட்களில் மலச்சிக்கல் ஏற்பட்டால் மருந்தை ஒரு நாள் நிறுத்தி சுகபேதி அருந்தவும். சுகபேதி அன்று பாலும், சாதமும் மட்டும் சாப்பிடவும். அடுத்த நாள் முதல் மருந்தை சாப்பிடவும்.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum