Top posting users this month
No user |
பற்பொடி
Page 1 of 1
பற்பொடி
தேவையான பொருட்கள்:
சீமைக் கல்நார்-500 கிராம்
வேப்பம் பட்டை-100கிராம்
கருவேலம் பட்டை-100கிராம்
ஆலம் விழுது-50 கிராம்
கடுக்காய் தோல்-50 கிராம்
கிராம்பு-50 கிராம்
களிப்பாக்கு-50 கிராம்
படிகாரம்-50 கிராம்
சோற்று உப்பு-50 கிராம்
எலுமிச்சம் பழச்சாறு.
செய்முறை:
சீமைக் கல்நாரை ஒரு மண் சட்டியில் போட்டு 50 கிராம் சோற்று உப்பை 4 லிட்டர் நீரில் கரைத்து அதில் ஊற்றி 3 நாட்கள் மூடி வைத்து கல்நாரைக் கழுவி உப்பு நீரை நீக்கி அதில் 250 மி.லிட்டர் எலுமிச்சம் பழச்சாற்றில் 750 மி.லிட்டர் தூய நீர் கலந்து ஊற்றி கல்நாரைப் போட்டு 2 நாள் கழித்து கல்நாரை எடுத்து தூய நீரில் கழுவி உலர விட்டு மாப்போல இடித்துக் கொள்ளவும்.
வேப்பம் பட்டை, கருவேலம் பட்டை, ஆலம் விழுது, கடுக்காய்த் தோல், கிராம்பு, களிப்பாக்கு இவைகளையும் இடித்து வடிகட்டி கல்நாருடன் சேர்க்கவேண்டும். படிகாரத்தையும் இடித்துப் போட்டு கடைசியாக சோற்று உப்பை மண் சட்டியில் வறுத்து இடித்துப் போட்டு நன்றாகக் கலந்து 3 நாட்கள் மூடி வைத்திருந்து பின்பு பயன்படுத்த வேண்டும்.
தீரும் நோய்கள்:
பல் வலி, பூச்சி, பல் கூச்சம், வாய் நாற்றம், பல் அரணை, சீழ் வடிதல், ஈறு வடிதல், ஈறு தடித்தல், பல் துட்டம் நீங்கும், பல் சுத்தமாகும் ஆகிய நோய்கள் குறையும். பற்கள் பலமாகும்.
குறிப்பு:
பல் நோயுடையவர்கள் காலை, பிற்பகல், இரவு ஆகிய மூன்று வேளைகள் பல் துலக்கலாம்.
சீமைக் கல்நார்-500 கிராம்
வேப்பம் பட்டை-100கிராம்
கருவேலம் பட்டை-100கிராம்
ஆலம் விழுது-50 கிராம்
கடுக்காய் தோல்-50 கிராம்
கிராம்பு-50 கிராம்
களிப்பாக்கு-50 கிராம்
படிகாரம்-50 கிராம்
சோற்று உப்பு-50 கிராம்
எலுமிச்சம் பழச்சாறு.
செய்முறை:
சீமைக் கல்நாரை ஒரு மண் சட்டியில் போட்டு 50 கிராம் சோற்று உப்பை 4 லிட்டர் நீரில் கரைத்து அதில் ஊற்றி 3 நாட்கள் மூடி வைத்து கல்நாரைக் கழுவி உப்பு நீரை நீக்கி அதில் 250 மி.லிட்டர் எலுமிச்சம் பழச்சாற்றில் 750 மி.லிட்டர் தூய நீர் கலந்து ஊற்றி கல்நாரைப் போட்டு 2 நாள் கழித்து கல்நாரை எடுத்து தூய நீரில் கழுவி உலர விட்டு மாப்போல இடித்துக் கொள்ளவும்.
வேப்பம் பட்டை, கருவேலம் பட்டை, ஆலம் விழுது, கடுக்காய்த் தோல், கிராம்பு, களிப்பாக்கு இவைகளையும் இடித்து வடிகட்டி கல்நாருடன் சேர்க்கவேண்டும். படிகாரத்தையும் இடித்துப் போட்டு கடைசியாக சோற்று உப்பை மண் சட்டியில் வறுத்து இடித்துப் போட்டு நன்றாகக் கலந்து 3 நாட்கள் மூடி வைத்திருந்து பின்பு பயன்படுத்த வேண்டும்.
தீரும் நோய்கள்:
பல் வலி, பூச்சி, பல் கூச்சம், வாய் நாற்றம், பல் அரணை, சீழ் வடிதல், ஈறு வடிதல், ஈறு தடித்தல், பல் துட்டம் நீங்கும், பல் சுத்தமாகும் ஆகிய நோய்கள் குறையும். பற்கள் பலமாகும்.
குறிப்பு:
பல் நோயுடையவர்கள் காலை, பிற்பகல், இரவு ஆகிய மூன்று வேளைகள் பல் துலக்கலாம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum