Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மரத்தின் வேர் வகை

Go down

மரத்தின் வேர் வகை          Empty மரத்தின் வேர் வகை

Post by oviya Thu Aug 27, 2015 3:47 pm

வில்வ மரத்தின் வேர்:
வில்வ வேரினால் வாத குன்மம், கபாதிக்கம், பித்தசோகை, கபத்தால் வந்த தாகம், சலக்கோவை, சந்நிபாகம், தேகக்கடுப்பு, மந்தாக்கினி, அருசி, உஷ்ணபேதி, விக்கல், பித்த ரூட்சை, வமனம், அதிசுட்கம் முதலிய ரோகங்கள் நிங்கும். அழகும், உடல் வலிமையும் உண்டாகும்.
பாதிரி மரத்தின் வேர்:
மதுமூத்திரம், கரப்பான், கண், காது, கை, கால் இவைகளை பற்றிய எரிச்சல், மேகப்பிடகம், பெரு விரணம், ஆகந்துக மூல ரோகம், புடைய சிலேஷ்ம வாத தொந்தம், அக்கினி மாந்தம் ஆகியவை போகும்.
செண்பக மரத்தின் வேர்:
உஷ்ணம், சுரம், நேத்திர தோஷம் ஆகியவைகளை நீக்கி பசியை உண்டாக்கும்.
மாமரத்தின் வேர்:
வேர் பட்டையானது சீத இரத்த பேதி, வயிற்றுக்கடுப்பு, வாந்தி இவைகளை போக்கும்.
இலுப்பை மரத்தின் வேர்:
துவர்ப்பாகிய இலுப்பை வேரினால் நிரணம், புரை, வயிற்றுக்கடுப்பு, அதிமூத்திரம், இரத்த கிராணி, அக்கினி மந்தம், அருசி, வாதசூலை, சகல சுரம், விந்து குறைவு, தாகம், உடல் அயர்வு ஆகியவை நீங்கும். தலை நோய்களுக்கு ஆகாது. உஷ்ணகாரி என்று கூறுவர்.
மருதோன்றி மரத்தின் வேர்:
பெண்கள் ருது கால சோணித தோஷங்கள், அசிர்க்கா நோய், பித்த நோய் ஆகியவை நீங்கும்.
வெண்காலி மரத்தின் வேர்:
கசப்பான வெள்ளை கருங்காலி மரத்தின் வேருக்கு பெரு வயிறு, ஏறு பித்தம், கிருஷ்ண சிம்மக தோஷம், கருமேகம் ஆகியவை தீரும்.
கருங்காலி மரத்தின் வேர்:
மலாசய கருங்கிருமி பாகுபடும் மதுநீர், தோல் நோய்கள், இரத்தபேதி ஆகியவை போகும்.
எட்டி மரத்தின் வேர்:
விஷமுஷ்டி என்கிற எட்டி மரம், ஆல விஷம் போன்றது. இதன் வேரால் மகா சர்ப்ப விஷங்களும், மனச்சோர்வும் நீங்கும்.
புங்க மரத்தின் வேர்:
வாத குடைச்சல், திரிதோஷ மூர்ச்சை, தாப சுரம், வாய்வு, இரத்த தாதுவினால் பிறக்கின்ற நோய்கள், விரணம், புரையோடல், சர்ப்ப விஷம் ஆகியவை தீரும்.
நாவல் மரத்தின் வேர்:
வாதவிகாரம், கரப்பான், புண், வெகு மூத்திரம், இரத்த சீதபேதி, வாத சுரம், மச்சாமேகம் ஆகியவை நீங்கும்.
கருவேல மரத்தின் வேர்:
இரத்தக்கடுப்பு, அக்கினி மந்தம், மகாவாதம், கரப்பான், அதிசாரம் ஆகியவை போகும்.
உருவ மரத்தின் வேர்:
இதை உதிரமரம் என்றும் கூறுவர். விரணம், புரை, கிரகணி, இரத்த பேதி, சீதக்கடுப்பு, தாகம், மூர்ச்சை, பித்த சிதளம் ஆகியவை விலகும்.
அகத்தி மரத்தின் வேர்:
சிறந்த அகத்தி வேரால் வெள்ளை, விதாகம், உடல், உள்ளங்கை, நாளம், பஞ்சேந்திரியம் ஆகிய இடங்களில் உண்டாகும் எரிச்சல் நீங்கும்.
நெல்லி மரத்தின் வேர்:
வாந்தி, அருசி, திரிதோஷ கோபம், தருண சுரம், சந்நி ஆகியவை நீங்கும். திரிதோஷ சமனமும், மலப்போக்கும் உண்டாகும்.
அருநெல்லிக்காய் மரத்தின் வேர்:
தனிச்சுரம், அரோசகம், திரிதோஷ வாந்தி, இரத்த புஷ்டி, சந்நிபாதம் ஆகியவை விலகும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum