Top posting users this month
No user |
பெண்களைக் குறி வைத்து ஊசிபோடும் மர்ம நபர்!.. எய்ட்ஸ் ஊசியா? ஆந்திராவில் பரபரப்பு
Page 1 of 1
பெண்களைக் குறி வைத்து ஊசிபோடும் மர்ம நபர்!.. எய்ட்ஸ் ஊசியா? ஆந்திராவில் பரபரப்பு
ஆந்திராவில் முகத்தை மூடியபடி பைக்கில் வந்து பெண்களுக்கு ஊசி போட்டு விட்டு தப்பிச் செல்லும் மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த 2 மாணவிகள் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அம்மாணவிகளிடம், பைக்கில் வந்த நபர் ஒருவர் வழிமறித்து முகவரி கேட்டுள்ளார்.
மாணவிகள் பேசிக் கொண்டிருக்கும் போதே, தனது கைகளில் இருந்த ஊசியால் இருவரையும் குத்தி, மருந்தேற்றி விட்டு அந்த மர்மநபர் தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாணவிகளின் பெற்றோர் உண்டி பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர். பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கோரகலமூடி கிராமத்தில் நேற்று அதிகாலை நாககுமாரி (25) என்பவர் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது முகத்தை மூடியபடி வந்த அந்த மர்ம நபர் அவருக்கு ஊசி ஒன்றைப் போட்டு விட்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பியுள்ளார்.
நாககுமாரியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாலகோடேரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
பெண்களைக் குறி வைத்து ஊசி போடும் அந்நபர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த மர்மநபரைப் பிடிக்க பொலிசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே ஊசி போடப்பட்ட பெண்களின் ரத்தமாதிரி பரிசோதனைக்காக ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு செலுத்தப்பட்ட மருந்து வெள்ளை நிறத்தில் இருந்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, அது எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரின் ரத்தமாக இருக்க வாய்ப்பில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் பெண்களைக் குறி வைத்து ஊசி போட்டு வரும் மர்ம நபர் இன்னும் கைது செய்யப்படாததால், அப்பகுதியில் உள்ள பெண்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.
கடந்த சனிக்கிழமையன்று ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த 2 மாணவிகள் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அம்மாணவிகளிடம், பைக்கில் வந்த நபர் ஒருவர் வழிமறித்து முகவரி கேட்டுள்ளார்.
மாணவிகள் பேசிக் கொண்டிருக்கும் போதே, தனது கைகளில் இருந்த ஊசியால் இருவரையும் குத்தி, மருந்தேற்றி விட்டு அந்த மர்மநபர் தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாணவிகளின் பெற்றோர் உண்டி பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர். பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கோரகலமூடி கிராமத்தில் நேற்று அதிகாலை நாககுமாரி (25) என்பவர் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது முகத்தை மூடியபடி வந்த அந்த மர்ம நபர் அவருக்கு ஊசி ஒன்றைப் போட்டு விட்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பியுள்ளார்.
நாககுமாரியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாலகோடேரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
பெண்களைக் குறி வைத்து ஊசி போடும் அந்நபர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த மர்மநபரைப் பிடிக்க பொலிசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே ஊசி போடப்பட்ட பெண்களின் ரத்தமாதிரி பரிசோதனைக்காக ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு செலுத்தப்பட்ட மருந்து வெள்ளை நிறத்தில் இருந்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, அது எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரின் ரத்தமாக இருக்க வாய்ப்பில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் பெண்களைக் குறி வைத்து ஊசி போட்டு வரும் மர்ம நபர் இன்னும் கைது செய்யப்படாததால், அப்பகுதியில் உள்ள பெண்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum