Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இ.தொ.காவினால் மலையக மக்கள் மீண்டும் ஏமாற்றம்!- திகாம்பரம் தெரிவிப்பு

Go down

இ.தொ.காவினால் மலையக மக்கள் மீண்டும் ஏமாற்றம்!- திகாம்பரம் தெரிவிப்பு Empty இ.தொ.காவினால் மலையக மக்கள் மீண்டும் ஏமாற்றம்!- திகாம்பரம் தெரிவிப்பு

Post by oviya Mon Aug 10, 2015 2:37 pm

காலங்காலமாக மக்களை ஏமாற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறையும் சம்பள பேச்சுவார்த்தையை ஏமாற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுடன் கலந்துரையாடி பெற்று தருவதாக கூறிய வாக்குறுதி பொய்யானது. இவ்வாறு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் பெற்று தருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூறி முதலாளிமார் சம்மேளனத்துடன் 6 கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அதற்கு முறையான தீர்வு எட்டப்படாத காரணத்தினால் அனைத்து தொழிலாளர்களையும் மெதுவாக பணி செய்யுமாறு இ.தொ.கா பணித்தது.

இதனையடுத்து அனைத்து தோட்ட தொழிலாளர்களும் மெதுவான பணி செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மெதுவான பணி செய்யும் நாட்களுக்கான கொடுப்பனவை பெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்த போதிலும் தேர்தல் காலம் என்பதனால் பேச்சுவார்த்தைகள் முடிவு இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த மாதம் தொழிலாளர்கள் வேலை செய்ததற்கான சம்பளம் 10.08.2015 அன்று திகதி வழங்கப்பட்டது.

ஆனால் இம்மக்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படாமல் குறைவான சம்பளமே வழங்கப்பட்டது.

குறிப்பாக மெதுவான பணி செய்த 9 நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. இதன் காணரமாக மக்கள் பொருளாதார ரீதியில் பாதிகக்ப்பட்டுள்ளனர்.

இம்மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை காரணமாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தனது கருத்தை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மெதுவான பணி செய்வதற்கு முன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்காது காலங்காலமாக இவர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள்.

இவர்களின் பேச்சுக்கேட்டு அனைத்து தொழிலாளர்களும் மெதுவான பணி செய்யும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

காலங்காலமாக மக்களை ஏமாற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறையும் சம்பள பேச்சுவார்த்தையை ஏமாற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுடன் கலந்துரையாடி பெற்று தருவதாக கூறிய வாக்குறுதி பொய்யானது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலையக மக்களுடைய ஜனாதிபதியாகும். நாங்கள் தெரிவு செய்த ஜனாதிபதியாகும்.

எனவே தேர்தல் முடிந்த பின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கலந்துரையாடி மக்களுக்கு நியாயமான சம்பளத்தை நிச்சயமாக பெற்று கொடுப்போம் என்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum