Top posting users this month
No user |
விமல் வீரவன்சவின் நிதி மோசடிகள் குறித்த தகவல்கள் அம்பலம்
Page 1 of 1
விமல் வீரவன்சவின் நிதி மோசடிகள் குறித்த தகவல்கள் அம்பலம்
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவினால் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடிகள் தொடர்பிலான தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
கணக்காய்வு அறிக்கையொன்றில் இந்த விடயங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
ராவணா பலய அமைப்பின் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் லங்காதீப பத்திரிகையின் ஆசிரியர் பிரசன்ன சஞ்சீவ தென்னக்கோன் ஆகியோருக்கு உதவிகளை செய்துள்ளார்.
இந்த உதவிகளுக்காக மக்களின் பணமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
வீடமைப்பு அமைச்சின் பெயரில் இரண்டு வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி அந்த வாகனங்களை குறித்த இருவருக்கும் விமல் வீரவன்ச வழங்கியுள்ளார்.
இந்த இருவரும் வீடமைப்பு அமைச்சில் எவ்வித பதவிகளையும் வகிக்கவில்லை.
சத்தாதிஸ்ஸ தேரருக்கு வழங்கப்பட்ட வாகனத்திற்காக மாதமொன்றுக்கு 69,000 ரூபா செலுத்தப்பட்டதுடன், தென்னக்கோனுக்கு வழங்கப்பட்ட வாகனத்திற்காக மாதாந்தம் 38,000 ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பொதுமக்கள் பணத்தை துஸ்பிரயோகம் செய்தவர்களை குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டள்ளது.
கணக்காய்வு அறிக்கையொன்றில் இந்த விடயங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
ராவணா பலய அமைப்பின் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் லங்காதீப பத்திரிகையின் ஆசிரியர் பிரசன்ன சஞ்சீவ தென்னக்கோன் ஆகியோருக்கு உதவிகளை செய்துள்ளார்.
இந்த உதவிகளுக்காக மக்களின் பணமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
வீடமைப்பு அமைச்சின் பெயரில் இரண்டு வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி அந்த வாகனங்களை குறித்த இருவருக்கும் விமல் வீரவன்ச வழங்கியுள்ளார்.
இந்த இருவரும் வீடமைப்பு அமைச்சில் எவ்வித பதவிகளையும் வகிக்கவில்லை.
சத்தாதிஸ்ஸ தேரருக்கு வழங்கப்பட்ட வாகனத்திற்காக மாதமொன்றுக்கு 69,000 ரூபா செலுத்தப்பட்டதுடன், தென்னக்கோனுக்கு வழங்கப்பட்ட வாகனத்திற்காக மாதாந்தம் 38,000 ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பொதுமக்கள் பணத்தை துஸ்பிரயோகம் செய்தவர்களை குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum