Top posting users this month
No user |
யாழில் தேர்தலை இலக்கு வைத்து இலஞ்சம் வழங்கும் சமூர்த்தி வங்கிகள்
Page 1 of 1
யாழில் தேர்தலை இலக்கு வைத்து இலஞ்சம் வழங்கும் சமூர்த்தி வங்கிகள்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை மையமாகக் கொண்டு யாழ்.மாவட்டத்தில் சமூர்த்தி வங்கிகளின் ஊடாக பணம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குறித்த திட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு வாக்குகளுக்கான பணம் இலஞ்சம் கொடுக்கப்படுகின்றது.
யாழ்.மாவட்டத்தில் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் மேம்பாட்டிற்காக உலர் உணவுப் பொருட்கள் மற்றும் வங்கிக் கடன்கள் சமுர்த்தி சங்கங்கள் ஊடாக வழங்கப்பட்டு வரும் நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னான கடந்த சில தினங்களாக குறித்த வங்கிகள் ஊடாக குடும்பத்தில் ஒருவருக்கு 2500 ரூபா பணம் வழங்கப்படுகின்றது.
குறித்த பணம் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் வழங்கப்படவில்லை. மாறாக ஈ.பி.டி.பி மற்றும் சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களுக்கே இவ்வாறு வழங்கப்பட்டு வருகிறது.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களில் வரும் சிலரும் குறித்த நிதியை பெறுகின்றனர்.
குறிப்பாக இந்த பணக்கொடுப்பனவு ஒழுங்கமைக்கப்பட்ட திட்டத்தின் ஊடாக வழங்கப்படவில்லை என்பதுடன் எழுந்தமானமாக வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியை மறந்து விடாதீர்கள் என கூறியே வங்கி அதிகாரிகள் குறித்த பணத்தினை வழங்குவதாக தெரிய வருகின்றது.
இந்நிலையில் குறித்த திட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு வாக்குகளுக்கான பணம் இலஞ்சம் கொடுக்கப்படுகின்றது.
யாழ்.மாவட்டத்தில் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் மேம்பாட்டிற்காக உலர் உணவுப் பொருட்கள் மற்றும் வங்கிக் கடன்கள் சமுர்த்தி சங்கங்கள் ஊடாக வழங்கப்பட்டு வரும் நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னான கடந்த சில தினங்களாக குறித்த வங்கிகள் ஊடாக குடும்பத்தில் ஒருவருக்கு 2500 ரூபா பணம் வழங்கப்படுகின்றது.
குறித்த பணம் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் வழங்கப்படவில்லை. மாறாக ஈ.பி.டி.பி மற்றும் சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களுக்கே இவ்வாறு வழங்கப்பட்டு வருகிறது.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களில் வரும் சிலரும் குறித்த நிதியை பெறுகின்றனர்.
குறிப்பாக இந்த பணக்கொடுப்பனவு ஒழுங்கமைக்கப்பட்ட திட்டத்தின் ஊடாக வழங்கப்படவில்லை என்பதுடன் எழுந்தமானமாக வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியை மறந்து விடாதீர்கள் என கூறியே வங்கி அதிகாரிகள் குறித்த பணத்தினை வழங்குவதாக தெரிய வருகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum