Top posting users this month
No user |
அரைத்த பூசணிக்காய் சாம்பார்
Page 1 of 1
அரைத்த பூசணிக்காய் சாம்பார்
பூசணிக்காய் - ஒரு கீற்று
துவரம் பருப்பு - 100 கிராம்
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி - 2 கொத்து
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
சீனி - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 6
கடலைப் பருப்பு - 2 மேசைக்கரண்டி
வெள்ளை உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
தனியா - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி+ஒரு மேசைக்கரண்டி
பூசணிக்காயை தோல் சீவி விட்டு ஸ்லைஸாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
நறுக்கின பூசணிக்காய் துண்டுகளை தண்ணீரில் அலசி ஒரு தட்டில் போட்டு இட்லி பானையில் வைத்து ஆவியில் 15 நிமிடம் வேக வைக்கவும். பூசணிக்காயில் தண்ணீர் சேர்க்காமல் வேக வைக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் மற்றும் சீரகம் போட்டு ஒரு நிமிடம்+30 நொடி வறுக்கவும். வறுத்த பிறகு ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கர் அல்லது இட்லி பானையில் வைத்து 15 நிமிடம் வேக வைக்கவும். பருப்பு வெந்ததும் அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
மஞ்சள் தூள் சேர்த்த பிறகு அடுப்பில் வைத்து வேக வைத்த பூசணிக்காயை போட்டு அதிகமான தீயில் வைத்து 3 நிமிடம் கொதிக்க விடவும்.
அதன் பிறகு ஊற வைத்திருக்கும் புளியுடன் உப்பு போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். 3 நிமிடம் கழித்து அடுப்பில் குழம்பு கொதிக்கும் போது தீயை குறைத்து வைத்து, அதன் பிறகு கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை ஊற்றவும்.
ஒரு நிமிடம் கழித்து அரைத்த வைத்திருக்கும் விழுதை சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டியால் கலக்கி விட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும்.
2 நிமிடம் கழித்து கொதித்ததும் விருப்பம் உள்ளவர்கள் சீனி 2 தேக்கரண்டி சேர்க்கலாம். அத்துடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு மேலும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
சாம்பார் கொதித்ததும், வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் அதை கொதிக்கும் சாம்பாரில் ஊற்றி இறக்கவும்.
சுவையான அரைத்த பூசணிக்காய் சாம்பார் தயார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum