Top posting users this month
No user |
கத்தரிக்காய் குழம்பு
Page 1 of 1
கத்தரிக்காய் குழம்பு
கத்தரிக்காய் - கால் கிலோ
சிறிய வெங்காயம் - 15
மிளகாய் வற்றல் - 4
சீரகம் - 3 தேக்கரண்டி
மல்லி - 1 தேக்கரண்டி
தேங்காய் - ஒரு கீற்று
புளி - சிறு எலுமிச்சை அளவு
கடுகு - அரைத் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கத்தரிக்காய்களை சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றல், சீரகம், மல்லி மற்றும் தேங்காய் கீற்றினை ஒன்றாய் அரைத்துக் கொள்ளவும்.
புளியை சற்று ஊற வைத்து, கரைத்து எடுத்துக் கொள்ளவும். அந்த புளித் தண்ணீரில் அரைத்த மசாலாவினையும், சிறிது மஞ்சத்தூள் மற்றும் தேவையான உப்பு போட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளித்து, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
அதனுடன் நறுக்கிய கத்தரிக்காய்களையும் போட்டு, புளித் தண்ணீரில் கரைத்த மசாலாவினையும் ஊற்றி கொதிக்க விடவும்.
குழம்பு நன்றாக கொதித்து கெட்டியானவுடன் லேசானத் தீயில் வைத்து எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கவும்.
இதே முறையில் கத்தரிக்காய்க்கு பதிலாக பாகற்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய், வாழைக்காய், சுண்டைக்காய், பீன்ஸ் இப்படி ஏதேனும் ஒரு காய் அல்லது இரண்டு காய்களைக் கொண்டும் குழம்பு தயாரிக்கலாம்.
சிறிய வெங்காயம் - 15
மிளகாய் வற்றல் - 4
சீரகம் - 3 தேக்கரண்டி
மல்லி - 1 தேக்கரண்டி
தேங்காய் - ஒரு கீற்று
புளி - சிறு எலுமிச்சை அளவு
கடுகு - அரைத் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கத்தரிக்காய்களை சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றல், சீரகம், மல்லி மற்றும் தேங்காய் கீற்றினை ஒன்றாய் அரைத்துக் கொள்ளவும்.
புளியை சற்று ஊற வைத்து, கரைத்து எடுத்துக் கொள்ளவும். அந்த புளித் தண்ணீரில் அரைத்த மசாலாவினையும், சிறிது மஞ்சத்தூள் மற்றும் தேவையான உப்பு போட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளித்து, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
அதனுடன் நறுக்கிய கத்தரிக்காய்களையும் போட்டு, புளித் தண்ணீரில் கரைத்த மசாலாவினையும் ஊற்றி கொதிக்க விடவும்.
குழம்பு நன்றாக கொதித்து கெட்டியானவுடன் லேசானத் தீயில் வைத்து எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கவும்.
இதே முறையில் கத்தரிக்காய்க்கு பதிலாக பாகற்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய், வாழைக்காய், சுண்டைக்காய், பீன்ஸ் இப்படி ஏதேனும் ஒரு காய் அல்லது இரண்டு காய்களைக் கொண்டும் குழம்பு தயாரிக்கலாம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum