Top posting users this month
No user |
தலைப்பாகை அணிந்து வந்த கன்னியாஸ்திரி: தேர்வு எழுத அனுமதிக்காத அதிகாரிகள்
Page 1 of 1
தலைப்பாகை அணிந்து வந்த கன்னியாஸ்திரி: தேர்வு எழுத அனுமதிக்காத அதிகாரிகள்
தலைப்பாகை அணிந்து மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதச்சென்ற கன்னியாஸ்திரி ஒருவருக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வு எழுதுவதற்காக சென்ற சீபா என்ற கன்னியாஸ்திரிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,
இந்தத் தேர்வை எழுத நான் எப்போதும்போல எனது கன்னியாஸ்திரி உடையில் வந்தேன். ஆனால் நான் இந்த உடையுடன் தேர்வு எழுத முடியாது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
நான் தேர்வு அறை அதிகாரிகளிடம் சென்று, 'என்னுடைய அடையாளத்தை நீங்கள் பரிசோதித்த பிறகு நான் மீண்டும் எனது தலைப்பாகையை அணிந்து கொள்கிறேன்' என்று கூறினேன்.
ஆனால் அவர்களோ நான் எனது தலைப்பாகையைக் கழற்றி வைத்தால் தான் தேர்வு எழுத முடியும் என்று கூறினர். அதற்கு நான் சம்மதிக்காமல் அங்கிருந்து திரும்பி விட்டேன் என்றார்.
கத்தோலிக்க கன்னியாஸ்திரிக்கு அனுமதி மறுக்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள கன்னியாஸ்திரி சீபா திருப்பணியாற்றி வரும் சைரோ மலங்காரா தேவாலயத்தின் செய்தித் தொடர்பாளர் போவாஸ் மாத்யூ,இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
ஒருவரின் நம்பிக்கைகளைப் பின்பற்ற அரசியலமைப்புச் சட்டத்தில் அனுமதி உள்ளது. நீதிமன்றம் அவ்வளவு தூரம் சென்றிருக்க அவசியமில்லை எனக் கூறியுள்ளார்.
மருத்துவ நுழைவு தேர்வு எழுதும் பரீட்சாத்திகள், பர்தா, முழு நீளச்சட்டை போன்ற உடைகளை அணிந்து வரக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் நேற்று அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வு எழுதுவதற்காக சென்ற சீபா என்ற கன்னியாஸ்திரிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,
இந்தத் தேர்வை எழுத நான் எப்போதும்போல எனது கன்னியாஸ்திரி உடையில் வந்தேன். ஆனால் நான் இந்த உடையுடன் தேர்வு எழுத முடியாது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
நான் தேர்வு அறை அதிகாரிகளிடம் சென்று, 'என்னுடைய அடையாளத்தை நீங்கள் பரிசோதித்த பிறகு நான் மீண்டும் எனது தலைப்பாகையை அணிந்து கொள்கிறேன்' என்று கூறினேன்.
ஆனால் அவர்களோ நான் எனது தலைப்பாகையைக் கழற்றி வைத்தால் தான் தேர்வு எழுத முடியும் என்று கூறினர். அதற்கு நான் சம்மதிக்காமல் அங்கிருந்து திரும்பி விட்டேன் என்றார்.
கத்தோலிக்க கன்னியாஸ்திரிக்கு அனுமதி மறுக்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள கன்னியாஸ்திரி சீபா திருப்பணியாற்றி வரும் சைரோ மலங்காரா தேவாலயத்தின் செய்தித் தொடர்பாளர் போவாஸ் மாத்யூ,இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
ஒருவரின் நம்பிக்கைகளைப் பின்பற்ற அரசியலமைப்புச் சட்டத்தில் அனுமதி உள்ளது. நீதிமன்றம் அவ்வளவு தூரம் சென்றிருக்க அவசியமில்லை எனக் கூறியுள்ளார்.
மருத்துவ நுழைவு தேர்வு எழுதும் பரீட்சாத்திகள், பர்தா, முழு நீளச்சட்டை போன்ற உடைகளை அணிந்து வரக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum