Top posting users this month
No user |
யார் என்ன கூறினாலும் ரணிலுடன் பேச்சுவார்ததை நடத்துவோம்: ஜே.வி.பி
Page 1 of 1
யார் என்ன கூறினாலும் ரணிலுடன் பேச்சுவார்ததை நடத்துவோம்: ஜே.வி.பி
யார் என்ன குற்றம் சுமத்தினாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த நாத்தன்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
நாங்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடினோம், அவசியம் ஏற்பட்டால் இன்றும் கலந்துரையாடுவோம் நாளையும் கலந்துரையாடுவோம்.
அதற்கு யாராவது ஐக்கிய தேசிய கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து விட்டதாக கூறினால் அது எங்களுக்கு பிரச்சினை இல்லை.
நாங்கள் பிரதமருடன் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் என்றால் அவர் எங்கள் வீட்டிற்கு வரமாட்டார் நாங்கள் தான் அவர் இருக்கும் இடத்திற்கு தேடி செல்ல வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் கலந்துரையாட வேண்டும் என்றாலும் அவருடைய இடத்திற்கு நாங்கள் தான் செல்ல வேண்டும்.
இதனை பலர் பவ்வேறு வகையில் குற்றம் சுமத்துகின்றனர். நாட்டை சரியானதொரு பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் பிரதமர் மாத்திரமல்ல, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க போன்றோரிடமும் நாங்கள் கலந்துரையாடுவோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த நாத்தன்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
நாங்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடினோம், அவசியம் ஏற்பட்டால் இன்றும் கலந்துரையாடுவோம் நாளையும் கலந்துரையாடுவோம்.
அதற்கு யாராவது ஐக்கிய தேசிய கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து விட்டதாக கூறினால் அது எங்களுக்கு பிரச்சினை இல்லை.
நாங்கள் பிரதமருடன் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் என்றால் அவர் எங்கள் வீட்டிற்கு வரமாட்டார் நாங்கள் தான் அவர் இருக்கும் இடத்திற்கு தேடி செல்ல வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் கலந்துரையாட வேண்டும் என்றாலும் அவருடைய இடத்திற்கு நாங்கள் தான் செல்ல வேண்டும்.
இதனை பலர் பவ்வேறு வகையில் குற்றம் சுமத்துகின்றனர். நாட்டை சரியானதொரு பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் பிரதமர் மாத்திரமல்ல, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க போன்றோரிடமும் நாங்கள் கலந்துரையாடுவோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum