Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று நாடகமாடிய ஆசிரியை கைது

Go down

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று நாடகமாடிய ஆசிரியை கைது  Empty கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று நாடகமாடிய ஆசிரியை கைது

Post by oviya Fri Jul 24, 2015 2:42 pm

மஹாராஸ்டிராவில் பள்ளி ஆசிரியை ஒருவர், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
பால்கர் நகரில் பள்ளி ஆசிரியராக பணியாற்றிவந்த சமீர் பிம்பில் (36) கடந்த 9ம் திகதி தனது வீட்டு குளியறையில் பிணமாக கிடந்துள்ளார்.

பால்கர் நகர பொலிசார் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, அந்த மரணத்தை இயற்கை மரணமாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தனது மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஆசிரியரின் தந்தை புகார் அளித்துள்ளார்.

பின்னர் பிரேத பரிசோதனை முடிவில், அவர் கழுத்து நெறிபட்டு இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டதால் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து, சமீரின் மனைவி சமீடாவை ரகசியமாக கண்காணித்த பொலிசார் அவரை விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவருக்கும் அதே பகுதியில் டிராவல் ஏஜென்சி நடத்திவரும் சந்தோஷ் யாதவ் என்பவருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இந்த தகாத உறவால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

பின்னர், குளிக்கும்போது மயங்கி விழுந்து இறந்ததுபோல் உறவினர்களை நம்ப வைத்துள்ளனர்.

குற்றவாளிகள் சமீடா மற்றும் சந்தோஷை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum