Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அழுத்தம் கொடுக்கிறதா அமெரிக்கா?

Go down

அழுத்தம் கொடுக்கிறதா அமெரிக்கா? Empty அழுத்தம் கொடுக்கிறதா அமெரிக்கா?

Post by oviya Sun Jul 19, 2015 2:29 pm

அமெரிக்காவுக்கான தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் சில விடயங்களை அழுத்திக் கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
வொஷிங்டனில் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலுடன் நடத்திய சந்திப்பின் போதே, அவருக்கு சில அறிவுரைகள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பொதுவாக இராஜதந்திர மட்டத்தில், அறிவுரைகள் என்ற பெயரில் தான் அழுத்தங்கள் கொடுக்கப்படுவது வழக்கம். இதனை மென் அழுத்தங்கள் என்று கூற லாம். முதலில் ஆலோசனை கூறுவது போல கூறுவார்கள் – அதற்கு இணங்காவிடின், கொஞ்சம் கடின மொழியில் கூறுவார்கள்.

அதற்கும் இணங்காவிடின் வெளிப்படையான தமது கருத்தைக் கூறுவார்கள். அதற்கடுத்து எச்சரிக்கையாக விடுப்பார்கள். அது உச்சபட்ச இராஜதந்திர அழுத்தமாக இருக்கும்.

இதிலும் அறிவுரை கூறப்படும் தரப்பு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது, எந்தளவுக்கு செல்வாக்குப் பெற்றது, அதன் பலம் என்ன என்பதைக் கருத்தில் கொண்டு, அழுத்தம் பிரயோகிக்கப்படும் முறைகளில் வித்தியாசம் காணப்படும்.

இப்போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அமெரிக்கத் தரப்பில் கூறப்பட்டதாகச் சொல்லப்படும் விடயங்களுக்கு வருவோம்.

இங்கு ஏன் அமெரிக்கத் தரப்பில் கூறப்பட்டதாக சொல்லப்படும் என்ற வார்த்தை பிரயோகம் பயன்படுத்தப்படுகிறது என்றால், இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.

நிஷா பிஸ்வாலுக்கும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு நடந்து ஒரு வாரத்துக்கு மேலாகியும், இரண்டு தரப்புகளில் இருந்தும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அமெரிக்காவுக்கு மேற்கொண்டது ஒரு அதிகாரபூர்வ பயணம் அல்ல. தனிப்பட்ட பயணம்.

இத்தகைய தனிப்பட்ட பயணத்தின் போது, பொதுவாக அதிகாரபூர்வ சந்திப்புகள், பேச்சுக்கள் நடத்தப்படுவதில்லை. அவ்வாறான சந்திப்புகள், பேச்சுக்கள் நடத்தப்பட்டாலும், அவைபற்றி பகிரங்கமாக அறிவிக்கப்படும் வழக்கம் இராஜதந்திர மட்டங்களில் இல்லை.

இருப்பினும், சில விதிவிலக்கான சம்பவங்கள் உள்ளன. உதாரணத்துக்கு, அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு கடந்தவாரம் பிரித்தானியா சென்ற வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக மற்றும் கொமன்வெல்த் விவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் கடந்த 15ஆம் திகதி லண்டனில் சந்தித்துப் பேசியிருந்தார்.

இவருக்கு இராப்போசன விருந்து கொடுத்ததாகவும் தகவல்.

விக்னேஸ்வரனுடனான சந்திப்புத் தொடர்பான விடயத்தையும், பேசப்பட்ட விடயங்கள் குறித்தும் படத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியிருந்தார் ஹியூகோ ஸ்வயர்.

ஆனால், நிஷா பிஸ்வால், டுவிட்டரில் பதிவுகளை இட்டு வந்தாலும், தனது எல்லா இராஜதந்திர சந்திப்புகளையும் பதிவிடும் வழக்கத்தைக் கொண்டவரில்லை.
அவர் விக்னேஸ்வரனைச் சந்தித்த விவகாரத்தை வெளியிடவில்லை.

இரண்டாவது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தனிப்பட்ட பயணத்தை மேற்கொள்வதாகவே விக்னேஸ்வரன் விடுமுறை பெற்றிருந்தார். மாகாண முதலமைச்சர் ஒருவர் வெளிநாடு செல்வதானால், முறைப்படி ஜனாதிபதி செயலகத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.

தனிப்பட்ட பயணம் என்றே ஜனாதிபதி செயலகத்தின் அனுமதியைப் பெற்றிருந்த அவர், இராஜதந்திர சந்திப்புகள் குறித்து அதிகாரபூர்வமற்ற வகையில் அரசாங்கத்துக்கு ஒருவேளை தெரியப்படுத்தியிருக்கலாம்.

அதிகாரபூர்வ சந்திப்புகளில் பங்கேற்பதானால், அதில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
ஏனென்றால், மாகாண முதலமைச்சர்களுக்கு வெளிவிவகாரம் தொடர்பான அதிகாரங்கள் இல்லை.

மத்திய அரசின் ஊடாகவே தொடர்புகள், பேச்சுக்களை வைத்துக் கொள்ள வேண்டும். வடக்கு மாகாணசபை அமைக்கப்பட்ட சில மாதங்களில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். அப்போது வடக்கு மாகாண முதலமைச்சரை அவர் சுதந்திரமாக சந்திக்க முடியவில்லை.

அதற்கான ஏற்பாடுகளை வெளிவிவகார அமைச்சே மேற்கொண்டது, அந்தச் சந்திப்பு அறையில், இந்திய – இலங்கை கொடிகளும் வைக்கப்பட்டன. அது அப்போது பெரும் தலையீடாக தமிழர் தரப்பினால் கருதப்பட்டது.

வெளிநாடுகளில் முதலமைச்சர் ஒருவர் பயணம் செய்யும் போது அதிகாரபூர்வ பேச்சுக்களை நடத்துவதானால், பொதுவாக அங்குள்ள தூதரகத்தின் அதிகாரிகளையும் அந்தப் பேச்சில் இணைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், நிஷா பிஸ்வால் – விக்னேஸ்வரன் சந்திப்பு அத்தகைய சந்திப்பாக இடம்பெறுவதை இருதரப்பும் விரும்பியிருக்காது.

எனவே, அதிகாரபூர்வ இராஜதந்திர உறவுகளில் எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாத வகையில் ஒரு தனிப்பட்ட சந்திப்பாக - ஊடகங்களில் பகிரப்பட அவசியமில்லாத ஒன்றாக நடந்திருக்கலாம்.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இப்போதைய அரசியல் சூழலில் இலங்கை அரசாங்கம் மீது அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால், இந்தச் சந்திப்புக் குறித்த விபரங்கள் வெளியாக வேண்டும் என்று எதிர்பார்த்திருக்காது.

ஒருவேளை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பதவியில் இருந்திருந்தால், இந்தச் சந்திப்பு விடயம், பெரிதாக ஊடகங்களுக்கு எடுத்துக் கூறப்பட்டிருக்கலாம்.

இப்போது அமெரிக்காவுக்குத் தேவையானது ஒன்றுதான், விக்னேஸ்வரனுக்கு சொல்ல வேண்டிய விடயங்கள் மட்டும் தான். அவை சொல்லப்பட்டாயிற்று.

விக்னேஸ்வரனுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால், கூறப்பட்டதாக சொல்லப்படும் விடயங்கள் இரண்டு. முதலாவது, இனப்படுகொலை பற்றிய தீவிரமான கருத்துக்கள், பிரசாரங்களை மென்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது, நல்லிணக்க முயற்சிகள், மாகாண அபிவிருத்தி போன்ற விடயங்களில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துடன் இணங்கிச் செயற்பட வேண்டும்.

இந்த இரண்டும் தான், இராஜதந்திர ரீதியாக விக்னேஸ்வரனுக்கு கூறப்பட்ட அறிவுரைகள் என்று கூறப்படுகின்றது.

இதுபற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியாகி ஒரு வாரத்துக்கு மேலாகியும், இன்னமும் சம்பந்தப்பட்ட தரப்புகள் மறுக்கவில்லை.

இல்லை என்று மறுக்கப்போனால், பேச்சு நடத்தப்பட்டதா இல்லையா என்பதை வெளிப்படுத்த வேண்டி வரும், இதுபற்றி பேசவில்லை என்றால், எதுபற்றிப் பேசப்பட்டது என்று கூற வேண்டி வரும். என்பதால், மௌனம் காக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

வடக்கு மாகாணசபையில் முதலமைச்சரே, இனப்படுகொலை பற்றிய தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருந்தார். அந்த தீர்மானத்துக்குப் பின்னர், பரவலாக தமிழ்மக்களின் ஆதரவு அவருக்கு அதிகரித்திருக்கிறது.

முன்னர் அவரது சில கருத்துக்களை விமர்சித்தவர்கள், தவறாகப் புரிந்து கொண்டவர்கள் கூட, தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு, கூட முதலமைச்சர் விக்னேஸ்வரனின், வேகம் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியதான தகவல்களும் உள்ளன.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டமை இனப்படுகொலையே என்ற பிரசாரத்தை முதல்வர் விக்னேஸ்வரன் சற்று மென்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா இந்த தருணத்தில் விரும்புவதற்கு முக்கியமான காரணம் உள்ளது.

இந்த விவகாரம் சிங்கள அரசியல்வாதிகளால் அரசியலில் பயன்படுத்தப்படக் கூடிய ஆபத்து உள்ளது என்பதே அது.

பாராளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள சூழலில், இந்த விவகாரத்துக்கு கூடுதல் அழுத்தங்கள் கொடுக்கப்படுவதால், மஹிந்த ராஜபக்ஷவின் பிரசார வியூகம் வலுப்பெறும் வாய்ப்புகள் உள்ளதை அமெரிக்கா புரிந்து கொண்டிருக்கலாம்.

மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ பதவிக்கு வருவதற்கு இது ஒரு வாய்ப்பாகி விடக் கூடாது என்பதற்காக அமெரிக்கா இந்தக் கருத்தை முன்வைத்திருக்கலாம்.

அதேவேளை, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் தீவிர நிலைப்பாட்டுக்குக் காரணம், தமிழர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் ஆர்வமே என்று கருதிவிடக் கூடாது.

அமெரிக்க நலன்களை பாதிக்கும் மஹிந்த அரசாங்கத்துக்கு எதிரான நகர்வாகவே அவை முன்னெடுக்கப்பட்டன. இப்போது கொழும்பில் தமக்குச் சாதகமான அரசாங்கம் ஒன்று இருக்கின்ற நிலையில், அதற்கு சர்வதேச ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் கருத்துக்கள் வலுப்பெறுவதை அமெரிக்கா விரும்பாது.

எனவே, இனப்படுகொலை விவகாரத்தை சற்று மென்மைப்படுத்தும் படி அமெரிக்கத் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருக்கலாம். இரண்டாவது, மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் இணக்கமான முறையில் செயற்படுமாறு அறிவுரை கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொழும்பின் தற்போதைய அரசாங்கம் அதிக நெருக்கடியை எதிர்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம்.

இந்தநிலையில், கொழும்பில் தமக்குச் சாதகமாக உள்ள அரசாங்கத்துடன் இணங் கிச் செயற்பட்டு நல்லிக்கணத்தையும், மாகாணத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதில் ஆச்சரியமில்லை.

எவ்வாறாயினும், அமெரிக்கத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படும் இந்த விடயங்கள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் நிலையான கொள்கையாக இருக்குமா என்பது சந்தேகம்.

ஏனென்றால், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ பதவிக்கு வரும் ஒரு சூழல் ஏற்பட்டால், இதே அறிவுரைகளைப் பின்பற்றுமாறு வடக்கு மாகாண முதல்வருக்கு அமெரிக்கா அறிவுரை கூறும் என்று எதிர்பார்க்க முடியாது.

அத்தகையதொரு கட்டத்தில் அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றங்கள் வர வாய்ப்புகள் உள்ளன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum