Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மஹிந்தவின் தாக்குதலினாலே சுசில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்?

Go down

மஹிந்தவின் தாக்குதலினாலே சுசில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்? Empty மஹிந்தவின் தாக்குதலினாலே சுசில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்?

Post by oviya Wed Jul 15, 2015 2:56 pm

பீலிக்ஸ் பெரேராவின் வீட்டில் கடந்த 12ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூட்டணி செயலாளர் உட்பட குழுவினர் முன் ஆத்திரமூட்டும் வகையில் குழப்பமடைந்து செயற்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
துமிந்த சில்வாவின் வேட்பு மனுவுக்கு எதிராக மஹிந்த செயற்பட்டுள்ளதாக துமிந்த சில்வாவின் சகோதரர் ரேனோ சில்வாவுக்கு தெரியவந்துள்ளது.

எனவே எதிர்வரும் பொது தேர்தலில் ரேனோ சில்வாவுக்கு சொந்தமான தனியார் ஊடகம் ஊடாக மஹிந்த ராஜபக்சவை தாக்குவதற்கு தீர்மானித்துள்ளார் என்பதனை தெரிந்துகொண்ட மஹிந்த ராஜபக்ச உடனடியாக துமிந்த சில்வாவுக்கு வேட்புமனு வழங்குமாறு வேட்புமனு குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன் போது சுசில் பிரேமஜயந்த, “நீங்கள் தான் துமிந்தவின் பெயரை நீக்குமாறு கூறினீர்கள் ரேனோ சில்வா ஐக்கிய தேசிய கட்சி காரன் என்று, தற்போது என்ன கூறுகின்றீர்கள்? நாங்கள் பட்டியலின் இறுதிக்கு வந்துவிட்டோம் இதற்கு மேல் ஒன்று செய்ய முடியாதென” கூறியுள்ளார்.

அவர் இவ்வாறு குறிப்பிட்டமையினால் கோபமடைந்த மஹிந்த ராஜபக்ச சுசில் பிரேமஜயந்தவின் கன்னத்தில் பலமுறை அறைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதன் போது சுசில் பிரேமஜயந்த இரண்டு கைகளையும் கன்னத்தில் வைத்துக்கொண்டு அமர்ந்துள்ளார்.

பின்னர் பிலியந்தளையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிற்கு மஹிந்த சென்றுள்ள நிலையில் கூட்டத்தின் போது மஹிந்தவுக்கு அவசர தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது,
சுசிலின் நிலைமை சரியில்லை எனவும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதன் போது குழப்பமடைந்த மஹிந்த ராஜபக்ச கூட்டத்தின் இடையில் அவசரமாக வைத்தியசாலைக்கு சென்று அவரை சமாதானப்படுத்தியுள்ளார் என நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum