Top posting users this month
No user |
Similar topics
கொத்துக்கறி புலாவ்
Page 1 of 1
கொத்துக்கறி புலாவ்
கொத்துக்கறி - அரைக் கிலோ
பிரியாணி அரிசி - இரண்டு கோப்பை
வெங்காயம் - இரண்டு கோப்பை
தக்காளி - ஒரு கோப்பை
இஞ்சி விழுது - இரண்டு தேக்கரண்டி
பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் - நான்கு
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பட்டை - இரண்டு துண்டு
இலவங்கம் - நான்கு
ஏலக்காய் - நான்கு
கொத்தமல்லி - ஒரு கட்டு
புதினா - ஒரு கட்டு
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - கால் கோப்பை
கொத்துக்கறியை மிதமான சுடு தண்ணீரால் கழுவிக் கொண்டு நன்கு பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெயை காய வைத்து சோம்பு, சீரகம், மற்றும் வாசனை பொருட்களைப் போட்டு தொடர்ந்து வெங்காயம், பச்சைமிளகாயை போட்டு நன்கு வறுக்கவும்.
பிறகு கறியை கொட்டி கறியிலுள்ள நீர் முற்றிலும் வற்றும் வரை நன்கு வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு தக்காளியைப் போட்டு வதக்கவும்.
அதன் பிறகு எல்லாத்தூளையும் போட்டு கொத்தமல்லி, புதினாவை போட்டு நன்கு வதக்கி விட்டு கழுவிய அரிசியை கொட்டி கிளறவும்.
பிறகு உப்பை போட்டு நான்கு கோப்பை தண்ணீரை ஊற்றி நன்கு கலக்கி விட்டு மூடி போட்டு வேகவிடவும். அடுப்பின் அனலை கூட்டி வைக்கவும்.
குக்கரின் ஒரு விசில் சத்தம் வந்தவுடன் அடுப்பின் அனலை குறைத்து வைக்கவும்.
பிறகு பத்து நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்.
ஒரு மூடி எலுமிச்சையை பிழிந்து விட்டு, தயிர் பச்சடியுடன் சூடாக பரிமாறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum