Top posting users this month
No user |
மகிந்தவின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன: ராஜித சேனாரத்ன
Page 1 of 1
மகிந்தவின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன: ராஜித சேனாரத்ன
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை உட்பட மூன்று பொறுப்புகளை கோரிய போதிலும் இறுதியில் அவருக்கு வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.
அங்கு பேசிய அவர்,
தற்போது பல்வேறு விடயங்கள் நடைபெறுகின்றன. முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்பாளராக போட்டியிடுவதற்கு மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.
அவர் பிரதமர் வேட்பாளராகவும் தேர்தலில் போட்டியிடும் அணிக்கு தலைமை தாங்கவும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் அதிகாரத்தையும் தேர்தல் நடவடிக்கைகளுக்கான பொறுப்பையும் கோரினார்.
அவரது இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இறுதியில் தனக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு மட்டும் வாய்ப்பை தாருங்கள் எனக் கோரினார். அணியிடம் கேட்டு சொல்வதாக ஜனாதிபதி கூறினார்.
இரண்டு அணிகள் இருக்கின்றன. அது தனக்கு பிரச்சினையில்லை என்றும் சொன்னார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பக்கம் இருந்து பார்க்கும் போது இது முக்கியமானது. கட்சி ஐக்கியப்படுவதே இதற்கு காரணம்.
நாங்கள் ராஜபக்சவினருக்கு எதிராக செயற்பட்டவர்கள் என்பதால், அவர் எம்முடன் இருப்பது குறித்து பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு ஏற்படும். இவை இரண்டிலும் யதார்த்தங்கள் உள்ளன.
ஒரு புறம் நல்லது என்கின்றனர் மறுபுறம் தவறு என்கின்றனர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.
அங்கு பேசிய அவர்,
தற்போது பல்வேறு விடயங்கள் நடைபெறுகின்றன. முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்பாளராக போட்டியிடுவதற்கு மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.
அவர் பிரதமர் வேட்பாளராகவும் தேர்தலில் போட்டியிடும் அணிக்கு தலைமை தாங்கவும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் அதிகாரத்தையும் தேர்தல் நடவடிக்கைகளுக்கான பொறுப்பையும் கோரினார்.
அவரது இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இறுதியில் தனக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு மட்டும் வாய்ப்பை தாருங்கள் எனக் கோரினார். அணியிடம் கேட்டு சொல்வதாக ஜனாதிபதி கூறினார்.
இரண்டு அணிகள் இருக்கின்றன. அது தனக்கு பிரச்சினையில்லை என்றும் சொன்னார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பக்கம் இருந்து பார்க்கும் போது இது முக்கியமானது. கட்சி ஐக்கியப்படுவதே இதற்கு காரணம்.
நாங்கள் ராஜபக்சவினருக்கு எதிராக செயற்பட்டவர்கள் என்பதால், அவர் எம்முடன் இருப்பது குறித்து பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு ஏற்படும். இவை இரண்டிலும் யதார்த்தங்கள் உள்ளன.
ஒரு புறம் நல்லது என்கின்றனர் மறுபுறம் தவறு என்கின்றனர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum