Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பள்ளிகளில் இருந்து பெற்றோருக்கு போர்க்கள செய்தி!

Go down

பள்ளிகளில் இருந்து பெற்றோருக்கு போர்க்கள செய்தி! Empty பள்ளிகளில் இருந்து பெற்றோருக்கு போர்க்கள செய்தி!

Post by oviya Sat Jul 04, 2015 2:13 pm

பள்ளியில் நடந்த மாணவர் சண்டையில் ஒரு மாணவன் இன்னொரு மாணவனால் அடித்தே கொல்லப்பட்டது, அத்தனை பெற்றோரையுமே அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.
காஞ்சிபுரத்தில் சுப்புராயர் முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளியில். பதினொன்றாம் வகுப்பில் படித்த ஜானகிராமன் என்ற மாணவனை, அதே வகுப்பில் படித்த இன்னொரு மாணவன் முக்கிய காரணம் ஏதுமின்றி ஜானகிராமனின் தாயை தரக்குறைவாக பேசியிருக்கிறான்.

வாய் தகராறு சண்டையாகி உள்ளது. ஜானகிராமனை அந்த மாணவன் கழுத்திலும் மார்பிலும் கடுமையாக தாக்கியதால் அந்த இடத்திலே மயங்கி விழுந்திருக்கிறான்.

அவனை மருத்துவமனைக்கு கொண்டுசென்றும் சிகிச்சை பலனளிக்காமல் அன்று நள்ளிரவிலே ஜானகிராமன் இறந்துவிட்டான்.

தப்பியோடி ஒழிந்த மாணவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது.

பள்ளி நிர்வாகங்களும் வன்முறை குணம் உள்ள மாணவர்களை இது போன்ற சம்பவங்கள் நடக்கும் முன்பாக அவ்வளவு எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடிவதில்லை.

அதேநேரத்தில், அமைதிப் பூங்காவான, ஆலயத்துக்கு நிகரான பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைத்த பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் கொலையுண்ட போர்க்களச் செய்தியை பள்ளிகள் தந்தால், அவர்களால் தாங்கிக்கொள்ள முடியுமா? பள்ளி நிர்வாகத்தை மன்னிக்கத்தான் மனம் வருமா?

பள்ளி மாணவர்களுக்குள் சின்ன சின்ன பிரச்சினைகள், அடிதடி கூட வருவது சகஜம்தான். ஆனால், அடித்தே கொல்லும் அளவுக்கு வெறி வருவதுக்கு மாணவனுடைய தனிப்பட்ட குணாதிசயமே காரணமாக இருந்தாலும் நிச்சயமாக வீட்டிலோ, பள்ளியிலோ ஏற்படும் மன அழுத்தங்களும் ஒரு காரணமாகின்றன.

சென்னையிலும் அண்மையில் அதுபோல ஒரு மாணவன் பலியானான். 12ம் வகுப்பில் ஒரே பள்ளியில் படித்த இரண்டு மாணவர்கள். ஆளுக்கு ஒரு மாணவ கோஷ்டி வேறு.

தங்களுக்கு பிடித்தமான மாணவியிடம் நெருக்கமாக பழகுவதில் போட்டியும் மோதலும் இருந்து வந்துள்ளது.

இருவரும் ஒரே கல்லூரியில், சேர்ந்த ஓரிரு நாட்களிலே அவர்களுக்குள் நடந்த சண்டையில் ஒரு மாணவன் இன்னொரு மாணவனை கீழே தள்ளியிருக்கிறான்.

கீழே விழுந்த மாணவன் கல்லை எடுத்து தள்ளியவனின் தலையில் தாக்க அந்த இடத்திலே மயங்கி விழுந்து இறந்துவிட்டான். தாக்கிய மாணவன் சிறையில் தள்ளப்பட்டான்.

இந்த இரண்டு மாணவர்களுடைய பெற்றோருமே பல லட்சங்களை திரட்டி கல்லூரியில் கொட்டிக் கொடுத்து இடம் வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் மீது பெற்றோர் கொண்டிருந்த எதிர்கால கனவுகள் கனவாகவே கலைந்தது.

இறந்த மாணவனுக்குதான் இரக்கப்படுகிறோம். ஒரு கொலையை செய்துவிட்டு நிற்பவன் பள்ளி மாணவனாக இருந்தாலும் நாம் இரக்கப்படுவதில்லை.

மருத்துவக் கல்லூரி மாணவன் நாவரசு கொலையில் தொடங்கி தமிழகத்தில் பரவலாக அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது நடந்து வருகிறது. பள்ளி கல்லூரிகளும் பெற்றோர்களும் இதை தடுக்க வழிதெரியாமல் தவிக்கின்றனர்.

இது யாரோ ஒரு மாணவனுக்கு நடந்தது. அவன் பெற்றோருக்கு மட்டுமான பாதிப்பாக இதை கருதக் கூடாது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு காத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோருக்குமான பிரச்சினை.

மாணவர்களின் ஆக்ரோஷத்துக்கான காரணம் மாறிக்கொண்டிருக்கும் சமுதாயத்துக்குள்தான் ஒழிந்திருக்கிறது என்பதை நாம் அறியவெண்டும். அப்போதுதான் அதுக்கான சரியான தீர்வை நம்மால் எட்டமுடியும்.

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குள் நடந்த சண்டையிலேயே அடித்து கொலையுண்ட சம்பவங்களும் ஏற்பட்டிருக்கிறது.

ஆசிரியர்கள் மாணவர்களின் படிப்புத்திறனை மட்டுமே ஆய்வு செய்வதோடு நின்று விடுகிறார்கள். மாணவர்களின் பேச்சு, மற்ற குணங்களையும் கவனித்து சாத்வீகமாக மாற்ற முயற்சி செய்யவேண்டும். அது அந்த மாணவனுக்கும் பள்ளிக்கும் அவன் பெற்றோருக்குமான நல்லது மட்டுமல்ல.

அவனால் தாக்கப்படுவதிலிருந்து தப்பிக்கும் அப்பாவியான நல்ல மாணவர்களையும் பாதுகாக்கின்ற செயலாகும்.

பள்ளிகளில் நீதிபோதனைகள் குறந்துவிட்டது பொதுதேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் குறிக்கோளே வளர்ந்துவிட்டது.

பள்ளிகளில் கடினமான பாடச்சுமை, வெளியிலும் செல்போன், வீடியோ கேம், மதுப்பழக்கம் என்று மணவர்கள் மனம் சிந்திக்கவிடப்படாமல் அழுத்தப்படுகிறது.

படிக்கும் இனிமையான காலத்தில் பாடச்சுமைகளாலும் இயந்திர வாழ்க்கை முறையாலும் தாங்கள் பணிக்குச் செல்லும் காலத்தைவிடவும் கஷ்டப்படுகிறார்கள்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum