Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற பொலிஸ்: அடித்து உதைத்த பொதுமக்கள்

Go down

பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற பொலிஸ்: அடித்து உதைத்த பொதுமக்கள் Empty பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற பொலிஸ்: அடித்து உதைத்த பொதுமக்கள்

Post by oviya Sun Jun 28, 2015 3:09 pm

சென்னையில் நேற்று இரவு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற டிராபிக் பொலிசை பொதுமக்கள் அடித்து உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை தாசாமகான் பகுதியை சேர்ந்த அசீனா, இவர் கோடம்பாக்கத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று இரவு 8.30மணியளவில், வீடு திரும்புவதற்காக கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம், அசீனாவுக்கு சாலையை கடக்க உதவுவது போல் அவரது கையை பிடித்து இழுத்துள்ளார்.

மேலும், அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அசீனா பன்னீர்செல்வத்தை கண்டித்த போது, அவர் அசீனாவை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் வேதனை அடைந்த அசீனா அருகில் இருந்த பள்ளிவாசலுக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

இதையடுத்து ஒன்று திரண்டு சென்ற அவர்கள், பன்னீர்செல்வத்தை தாக்கியுள்ளனர்.

மேலும் பன்னீர்செல்வத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் மறுமலர்ச்சி தமுமுக நிர்வாகிகள் தலைமையில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் கோடம்பாக்கத்தில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ் உயர் அதிகாரிகள், சாலைமறியலில் ஈடுப்பட்டிருந்தவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், பன்னீர்செல்வத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum