Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சுவிஸில் இடம்பெற்ற அயலகத் தமிழாசிரியர் பட்டயப்படிப்பு தொடக்கவிழா

Go down

சுவிஸில் இடம்பெற்ற அயலகத் தமிழாசிரியர் பட்டயப்படிப்பு தொடக்கவிழா Empty சுவிஸில் இடம்பெற்ற அயலகத் தமிழாசிரியர் பட்டயப்படிப்பு தொடக்கவிழா

Post by oviya Sun Jun 28, 2015 2:45 pm

சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் அயலகத் தமிழாசிரியர் பட்டயப்படிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் சூழலில் தாய்மொழிக் கல்வியை விருப்புடன் கற்றுவரும் மாணவர்களுக்கும், தாயகத்தின் போர்ச்சூழலால் தங்கள் கல்வியை தொடர முடியாது புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் அவர்களின் தாய்மொழிக் கல்விக்கான, தாய்மொழி கற்பித்தலுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் ஒரே நோக்குடன்,

தமிழ்க் கல்விச் சேவை சுவிட்சர்லாந்தினால் முன்னெடுக்கப்பட்ட பெருமுயற்சியே திரு. இராமசாமி நினைவுப்பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயத்துடன் இணைந்த அயலகத் தமிழாசிரியர் பட்டயப்படிப்பு ஆகும்.

அந்தவகையில், மங்கள விளக்கேற்றல், விருந்தினர்களை வரவேற்று மாலை அணிவித்தல், அகவணக்கம் போன்ற அம்சங்களுடன் ஆரம்பமாகிய நிகழ்வில், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக துறைசார் பட்டப்படிப்புகள், மற்றும் பட்டயப்படிப்புக்கள் பற்றிய விளக்க காணொளிக் காட்சி அகன்றதிரையில் காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழ்க்கல்விச் சேவை சுவிட்சர்லாந்து ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி பார்த்தீபன் அவர்களின் வரவேற்புரையும், விருந்தினர்களாக சுவிஸ் நாட்டின் சூரிச் மாநில கல்வித்திணைக்கள தாய்மொழி மற்றும் கலாச்சாரப் பிரிவுத் தலைவர் மார்க்கொஸ் ரனிக்கர் அவர்களும்,

தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக முனைவர் இல. சுந்தரம் அவர்களும், உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் சார்பாக கனடாவிலிருந்து அகிலத் தலைவர் வி.சு. துரைராசா, யேர்மனியிலிருந்து அகிலச் செயலாளர் துரை. கணேசலிங்கம் ஆகியோரும் கலந்து சிறப்பித்து வாழ்த்துரைகளை வழங்கியிருந்தனர்.

மட்டுப்படுத்தப்பட்ட விண்ணப்ப மாணவர்களைக் கொண்டதாக அமைந்த பட்டயப்படிப்பில் எண்பத்துமூன்று மாணவர்கள் அனுமதியட்டை அணிவித்து இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

தமிழ் கல்விச் சேவையின் ஆண்டு பத்து வரை கல்வி கற்றுத் தேர்ச்சியடைந்த மாணவர்களும், தமிழ் வித்தியாலயப் பொறுப்பாளர்கள், மற்றும் ஆசிரியர்களும் இந்த பட்டயப்படிப்பில் ஆர்வத்துடன் இணைந்து கொண்டனர்.

28.06.2015 ஞாயிறு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதல்நாள் வகுப்புக்கள் ஆரம்பமாகின்றன. கணனி வழியாகவும், சனி, ஞாயிறு நேரடி சிறப்பு வகுப்புக்களாகவும் பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்று ஓராண்டிற்கு இரு பருவங்கள் கொண்ட பரீட்சைகள் மூலம் சித்தியபைவர்களுக்கு 2016 ஜுன் மாதத்தில் 'அயலகத் தமிழாசிரியர்" பட்டயம் வழங்கி மதிப்பளிக்கப்படும்.

விண்ணப்பித்து மாணவர்களாக இணைந்து கொண்ட அனைவருக்கும் திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயமும், தமிழ்க்கல்விச் சேவை சுவிட்சர்லாந்தும் தமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum