Top posting users this month
No user |
கருணைக்கிழங்கு பொரியல்
Page 1 of 1
கருணைக்கிழங்கு பொரியல்
கருணைக்கிழங்கு - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
சோம்புத்தூள் - ஒரு ஸ்பூன்
எண்ணெய் - 6 தேக்கரண்டி
கடுகு - ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கருணைக்கிழங்கை நன்கு தோல் சீவி மண் வாசனைப் போக கழுவி விடவும்.
பின்பு அதை குக்கரில் ஒரு விசில் வர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தேங்காய் துருவல் இவைகளை தனித்தனியே வெறும் வாணலியில் பொன்னிறமாக வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வெந்த கிழங்கை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வறுத்தவைகளையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து, ஒரு ஸ்பூன் உப்பு போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், மசாலா தூள் வகைகளை சேர்த்து வதக்கி விட்டு நறுக்கி வைத்திருக்கும் கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டவும்.
அடுப்பை மிதமான தீயில் பத்து நிமிடம் அப்படியே விடவும். (இடையில் ஒரு முறை கிளறவும்)
பொன்னிறமானதும், வறுத்து பொடித்த தூளை தூவி பிரட்டி விட்டு, உப்பு சரிப் பார்த்து விட்டு ஐந்து நிமிடம் அப்படியே விடவும். நன்கு உதிரியாய் சிவந்து வரும். அதன் பிறகு கிழங்கை இறக்கி விடவும். சுவையான கருணைக்கிழங்கு பொரியல் தயார்.
பெரிய வெங்காயம் - 2
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
சோம்புத்தூள் - ஒரு ஸ்பூன்
எண்ணெய் - 6 தேக்கரண்டி
கடுகு - ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கருணைக்கிழங்கை நன்கு தோல் சீவி மண் வாசனைப் போக கழுவி விடவும்.
பின்பு அதை குக்கரில் ஒரு விசில் வர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தேங்காய் துருவல் இவைகளை தனித்தனியே வெறும் வாணலியில் பொன்னிறமாக வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வெந்த கிழங்கை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வறுத்தவைகளையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து, ஒரு ஸ்பூன் உப்பு போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், மசாலா தூள் வகைகளை சேர்த்து வதக்கி விட்டு நறுக்கி வைத்திருக்கும் கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டவும்.
அடுப்பை மிதமான தீயில் பத்து நிமிடம் அப்படியே விடவும். (இடையில் ஒரு முறை கிளறவும்)
பொன்னிறமானதும், வறுத்து பொடித்த தூளை தூவி பிரட்டி விட்டு, உப்பு சரிப் பார்த்து விட்டு ஐந்து நிமிடம் அப்படியே விடவும். நன்கு உதிரியாய் சிவந்து வரும். அதன் பிறகு கிழங்கை இறக்கி விடவும். சுவையான கருணைக்கிழங்கு பொரியல் தயார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum