Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஒரே நாடு! ஒரே இனம்: மகிந்த ராஜபக்சவின் கனவை நிறைவேற்ற முயலும் தமிழ்த் தலைமைகள்

Go down

ஒரே நாடு! ஒரே இனம்: மகிந்த ராஜபக்சவின் கனவை நிறைவேற்ற முயலும் தமிழ்த் தலைமைகள் Empty ஒரே நாடு! ஒரே இனம்: மகிந்த ராஜபக்சவின் கனவை நிறைவேற்ற முயலும் தமிழ்த் தலைமைகள்

Post by oviya Wed Jun 24, 2015 3:36 pm

தமிழீழ விடுதலை போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வடக்கிற்கு சென்று தமிழ் மக்கள் மத்தியில் உரையாற்றிய போது கூறியதை தற்போது தமிழ் தலைமைகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
இலங்கை ஒரே நாடு, ஒரே மக்கள். இங்கு இனங்கள் கிடையாது, மதங்கள் கிடையாது. இந்நாட்டில் வாழும் மக்கள் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்று கூறிய அவரின் கனவை இப்பொழுது ஏனைய தலைமைகள் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதற்கு ஆதரமான பல நிஜங்கள் நிறைவேறி வருகின்றது.

இதற்கு சிங்களம் மாத்திரம் அல்ல, தமிழ் இன அரசியல் தலைமைகளும் உதவி வருகின்றது. இதை தெரிவிக்கும்போது தமிழ் தலைமைகள் தங்களின் மடமை அல்லது மறைப்பது வெளிச்சத்திற்கு வந்தாலும் தனது சுய நலத்திற்கு பாதகம் வருவதை தடுப்பதையே கவனத்தில் கொண்டுள்ளது.

எனவே சாதாரண மக்களின் உணர்வுகள் மழுங்கிக்கொண்டு இருப்பது யதார்த்தம். சில வேளை இந்த கட்டுரையின் மூலம் உண்மையை தெரிவிப்பது பலம் வாய்ந்த சக்திகள் தடுக்கலாம்.

ஆனால் வியாபார ரீதியாக பணம் பலம் முக்கியம். ஆனால் சமூக ரீதியாக பார்த்தால் "பணம் பாதாளம் வரை பாய்ந்தாலும் அது அழிவையே ஏற்படுத்தும் என்பதை மறந்து செயற்படும் அரசியல் தமிழ் தலைமைகள் நம் மத்தியில் தனது சுய நலத்தை பாதுகாக்க எதையும் செய்வார்கள் என்பது நிச்சயம்.

அந்த வகையிலேயே துடிக்கும் உள்ளங்களில் உயர்வான எண்ணங்கள் அடக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. ஏன் என்றால் இலங்கையில் உயர்மட்ட வகுப்பு என்று கூறப்படுபவர்கள் 10 விகிதமும், இடைத்தரகர்களாக இருப்பவர்கள் 20 விகிதமும், எதிலும் நேரடியாகவோ உடனடியாகவும் பாதிப்புக்குள்ளாகும் சமூகமே 70 விகிதமாக இருக்கின்றது.

இது குறிப்பாக தமிழ் மக்களின் விகிதாசாரமாகும். ஆகவே வாக்களித்தும் ,தலைமைகளை நம்பியும் ஏமாறும் சமூகம் 70 விகிதத்திற்குள் அடக்கப்பட்டுவிட்டது. அது முழு தமிழ் தொகையில் உள்ள மக்கள் தொகையில் உள்ள விகிதாசாரமாகும்.

அதற்கு உதாரணமாக அன்று விடுதலைப் புலிகள் சிறப்பாக இயங்கிய போது மதிக்கப்பட்ட போராளிகள் இன்று ஒதுக்கப்பட்டுள்ள உண்மை நிகழ்வாகும்.

அன்றும் இன்றும் இரு பக்கத்திற்கும் துணைபோனவர்கள் அனுபவிக்கும் சுய நல செயற்பாடுகள் இன்றும் எவ்வித தடங்களும் இன்றி நடந்தேறி வருகின்ற நிலையாகும்.

நாம் இங்கு யாரையும் விமர்சனம் செய்யவி்ல்லை. ஆனால் உண்மையை வெளிப்படுத்துகின்றோம்.

மகிந்த இருந்தாலும் இல்லாவிட்டாலும் இனவாதம் தொடர்வது ஏன்?

மகிந்த ராஜபக்ச ஆரம்பத்தில் பிரதமராக இருந்தபோது ஜனாதிபதி வேட்பாளராகுவாரா என்று துடிப்புடன் இருக்க வைத்தவர் சந்திரிக்கா, அவருக்கு பின் தனது பெயரை ஸ்ரீ.ல.சு.க பிரேரிக்காதா என்று ஏக்கத்துடன் ஏங்கிய மகிந்தவிற்கு உதவியாக அன்று, நிமல் சிறிபால டி சில்வா, விஜித்த விஜயமுனி சொய்சா போன்றவர்கள் இருந்ததை நாம் அறிவோம்.

இவர்களை தம் வசப்படுத்திய மகிந்த பல்வேறு செயல்பாடுகளை செய்து பிரதமர் பதவியில் இருந்து, ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட போராடிய போராட்டங்களை நேரில் பார்த்தவன் என்ற வகையிலேயே நான் இதை தெரிவிக்கின்றேன்.

அந்தநேரம் வடகிழக்கு மிகவும் ஒற்றுமையான விடுதலை போராட்டத்தில், சிறுபான்மை இன மக்களோ ரணில் பக்கம். இந்த நிலையில் வெளி மாவட்டத்தில் குறிப்பாக கொழும்பு,கண்டி ,நுவரெலியா பகுதி அரசில் செல்வாக்காக இருந்த இ.தோ.க, மு.கா ரணிலின் பக்கமே இருந்தது.

எனினும் இலங்கை மக்களின் வாக்குகள் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க போன்றவர்களுடன் ஒரு சில சிறுபான்மை மக்களும் அவர்களுடன், வட கிழக்கு பெரும்பான்மை தமிழ் இன விடுதலை போராளிகளின் உதவியுடன் வந்த மகிந்த தனது மறு உருவத்தை காட்ட,

அவரின் குடும்ப உறுப்பினர்களான சகோதரர்களையும் தென் பகுதி அரசியல்வாதிகளையும் நன்கு பயன்படுத்தி தனது செயல்பாடுகளை எந்தவித சிரமம் இன்றி செய்ய வட இந்தியர்களையும் பயன்படுத்தினார்.

என்றும் எப்போதும் தென் இந்திய தமிழர்கள் சந்தர்ப்பவாத அரசியலையே செய்து வந்ததை உறுதி செய்ய மு.கருணாநிதியின் குடும்பம் ஒன்றாக பயன்படுத்திய முக்கியஸ்தர்களாக இலங்கையில் இருந்து தென் இந்தியா சென்ற தோட்ட தொழிலாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் பயன்படுத்தியது. அந்த வழியிலேயே இந்தியாவின் பிரபல அமைச்சராக இருந்த ராசாவை மூலதனமாக்கியது.

இந்திய ஊழல் அமைச்சராக செயற்பட்ட ராசா யார்?

இவர் மலையக நகரான நுவரெலியா மாவட்டத்தில் அக்கரைபத்தனை பிரதேசத்தை பிறப்பிடமாகவும் இந்தியாவின் திருச்சி பெரம்பலூர் மாவட்டத்தை பூர்வீகமாகவும் கொண்டவர்.

இவரின் திறமையையும் அறிவையும் நன்கு பயன்படுத்திய மு.கருணாநிதி அவரின் அறிவை தவறாக பயன்படுத்தி தனது குடும்பத்தை அரசியலில் செல்வாக்குடையவர்களாக மாற்றிக்கொண்டார்.

இதற்கு இவரின் மகள் கனிமொழி உடந்தை, இந்த கனிமொழி, ராஜபக்ச அரசாங்கத்தின் விசேட விருந்தினராக வருகை தந்த போது இவருடன் திருமாவளவனையும் நான் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அப்போது இவர்கள் எமது இலங்கை மக்களை ஏதோ ஒருவகையில் உதவி காப்பாற்றும் உத்தமர்களாகவே என்று பார்க்க சென்றேன்.

ஆனால் அதன்பின் அவர்களைப்பற்றி உண்மை வெளிவந்தபோது துரோகத்திற்கு உதவும் சகுனியாகவே இப்பொழுது நினைக்கின்றேன்.

இவர்களை தமிழ் இனத்தை அழித்து அதன் மூலம் சுய நலத்தை அனுபவிக்க இலங்கையில் பிறந்து மத்திய அமைச்சரான ராசாவை பயன்படுத்திய கனிமொழியை நினைக்கின்றேன்.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பது பழமொழி. அதற்கு உதாரணமாக இந்த மு.க வின் மகள் கனிமொழியை பார்க்கின்றேன்.

இந்த நிலையையே மு.க ஏற்படுத்தினார். அதன் தண்டனையை அவர் அனுபவத்துக் கொண்டு இன்றும் இருக்கின்றார்.

மு.க இறக்க வேண்டியவராக இருந்தும், ஏன் உயிருடன் இருக்கின்றார் என்றால் அவர் செய்த அத்தனை தமிழ் இன அழிப்பிற்கும் தண்டனை பெற்றாக வேண்டும் என்பதற்காகவே.

இன்று அவரின் நிலை அனைத்திற்கும் ஏங்குவதாகும், ஏக்கம் அவரின் நோக்கமாகிவிட்டது இது மாய்ந்த ஈழ மக்களின் சாபம், ஆகவே அவர் இன்னும், நாளையும் அனுபவிக்கும் அத்தனை மன உளைச்சல்களும் கடவுள் கொடுத்த தண்டனை.

அதேபோல் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக செயல்பட்டு தமிழ் மக்களை அழித்த அத்தனை துரோகிகளும் இன்றும் வேதனையையும் சோதனைகளையும் அனுபவித்தாலும் வெளி உலகிற்கு தெரியாத சிதம்பர இரகசியமாகும்.

இவ்வாறான துரோகிகளே இன்றும் இடைத்தரகர்களாக இருந்து அனுபவிக்கின்றார்கள் 70 வீதம் தமிழ் சிங்கள மக்கள் இன்றும் ஒற்றுமையுடன் இருக்கவே விரும்புகின்றார்கள்.

ஆனால் மிகுதி 30 வீதம் அழியவேண்டும் அல்லது சமூக பொருளாதார நிலையில் இவர்கள் ஒழிய வேண்டும். அதுவரை இதை யாராலும் தடுக்கவோ தடைசெய்யவோ முடியாது.

இலங்கையில் தமிழ் இன அழிப்பு தொடரும் அதற்கு தமிழ் தலைமைகளும் உறுதுணையாகவே இருக்கும். இந்த நிலையை புதிய அரசு புதுப்புது அர்த்தங்களுடன் சர்வதேசத்திற்கும் தற்பொழுது எடுத்து செல்லும்.

இந்த சூழ்நிலையில் தமிழ் அரசியல் தலைமைகளும் அதற்கு புது அர்த்தங்களை காட்டி உதவியே செய்து கொண்டிருப்பதை தவிர, பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்காது காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum