Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த குற்றவாளி: அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்

Go down

ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த குற்றவாளி: அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம் Empty ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த குற்றவாளி: அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்

Post by oviya Tue Jun 23, 2015 3:19 pm

மஹாராஸ்டிரா உயர் நீதிமன்றத்தில் இரட்டை ஆயுளை எதிர்த்து மேல் முறையீடு செய்த கொலை குற்றவாளிக்கு நீதிபதிகள் 3 ஆயுள் தண்டனைகள் வழங்கி தீர்ப்பளித்துள்ளனர்.
நாக்பூர் பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு 8 வயது பள்ளி மாணவனை கடத்திச் சென்ற ஆயுஷ் நிர்மல் புகாலியா (26) என்பவன் 2 கோடி ரூபாய் பிணையத்தொகை கேட்டு மிரட்டினான்.

எதிர்ப்பார்த்தபடி பணம் கிடைக்காததால், ஆத்திரமடைந்த அவன், 11-10-2011 அன்று அந்த சிறுவனை துடிதுடிக்க கொடூரமாக வெட்டிக் கொன்றான்.

பின்னர் இந்த படுகொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் குற்றவாளி ஆயுஷ் நிர்மல் புகாலியாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கில் நாக்பூர் மாவட்ட நீதிமன்றம் கடந்த 4-4-2013 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், சிறுவனை கடத்திய குற்றத்துக்காகவும், அவனை கொடூரமான முறையில் கொலை செய்து, தடயங்களை அழித்ததற்காகவும் சேர்த்து இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.

இந்த உத்தரவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில், தண்டனையை குறைக்க வேண்டும் என கோரி ஆயுஷ் நிர்மல் புகாலியா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஆனால், பொலிசார் தரப்பில் இந்த தண்டனை மிகவும் குறைவானது என்றும், அவனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் எனவும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கவனித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் நாக்பூர் மாவட்ட நீதிமன்றம் அளித்த இரு ஆயுள் தண்டனைகளும் சரியான தீர்ப்புதான் என்பதை உறுதி செய்தனர்.

மேலும், மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற அ கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், கீழமை நீதிமன்றம் அளித்த இரட்டை ஆயுள் தண்டனையை மூன்று ஆயுள் தண்டனையாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum