Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஊழல் நிறைந்த ஆட்சியாளர்களுக்கு இனி இடமில்லை: சரத் பொன்சேகா

Go down

ஊழல் நிறைந்த ஆட்சியாளர்களுக்கு இனி இடமில்லை: சரத் பொன்சேகா  Empty ஊழல் நிறைந்த ஆட்சியாளர்களுக்கு இனி இடமில்லை: சரத் பொன்சேகா

Post by oviya Sun Jun 14, 2015 1:24 pm

மஹிந்த அரசாங்கத்தில் செயற்பட்ட ஊழல் நிறைந்த ஆட்சியாளர்களை மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு இடமளிக்க மாட்டோம் என ஜனநாயக கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த அரசாங்கத்தில் செயற்பட்டவர்கள் தேசிய வாதத்தை பரப்பிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் கிழக்கு மாகாண மக்களை தனியாக பிரித்து பிழையான அறிவுரை வழங்கி வடக்கு மக்களின் ஆதரவுகளை மாத்திரம் பெற்றுக்கொள்ள முயற்சித்தார்கள்.

அதேபோல் பல அமைப்புகளை உருவாக்கி பேருவளை பிரதேசத்தில் முஸ்லிம்களை தாக்கினார்கள்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியை ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமோ அல்லது எங்களது கட்சியான ஜனநாயக கட்சி மாத்திரமோ கொண்டு வரவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காரங்கிரஸ் இவை அனைத்தும் ஒன்றினைந்து செயற்பட்டதனாலே இந்த அரசாங்கத்தை அமைத்துக்கொள்ள முடிந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னைப் பயமுறுத்தி தன் முன்னால் முழங்காலிட வைக்க முயன்றார். எனது மனைவி, பிள்ளைகள் பழிவாங்கப்பட்டார்கள்.

தற்போதைய ஆட்சியில் உள்ள இரண்டு பெரும் கட்சிகளிலும் மோசடிகாரர்கள் உள்ளனர். கடந்த அரசாங்கத்தில் இருந்த மோசடிகாரர்களை இல்லாமல் செய்தது போல் எதிர்காலத்தில் தற்போதுள்ள சிலரையும் இல்லாமல் செய்ய வேண்டும்.

மேலும் நாட்டில் இன ஒற்றுமையுடனான ஆட்சி நிகழ்வதற்கு அனைவரும் ஒன்றினைய வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum