Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கொழும்பு முதலிடத்திற்கு வந்தமை குறித்து மகிழ்ச்சியே: மகிந்த

Go down

கொழும்பு முதலிடத்திற்கு வந்தமை குறித்து மகிழ்ச்சியே: மகிந்த Empty கொழும்பு முதலிடத்திற்கு வந்தமை குறித்து மகிழ்ச்சியே: மகிந்த

Post by oviya Wed Jun 10, 2015 2:22 pm

தரம் பிரித்தலின் அடிப்படையில் உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வந்த சுற்றுலா நகரங்களில் கொழும்பு நகரம் முதலிடத்தை பெற்றமை தொடர்பில் தாம் பெருமையடைவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யுத்தம் நிறைவுக்கு வந்ததுடன், தனது அரசாங்கத்தில் கொழும்பு நகரை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை தனது ஆட்சி காலத்திலேயே ஆரம்பித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கால்வாய் புனரமைப்பு, புதிய வீடமைப்பு யோசனை திட்டம், பூங்காக்கள் மற்றும் நடைபாதைகளை நிர்மாணித்தல், பழைய கட்டிடங்களை புனரமைத்தல், நகரங்களில் சாலைகள் மற்றும் நடைபாதைகளை நிர்மாணித்தல் இவ்வேலைத்திட்டத்தின் பிரதான அங்கம் வகித்தன என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நகரில் மேற்கொள்ளப்பட்ட இவ்வேலைத்திட்டங்கள் குறித்து அனைவரும் கலந்துரையாடினர் எனவும், தற்போது அது சர்வதேச ரீதியில் வரவேற்கப்பட்டுள்ளது எனவும், முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வெற்றிக்காக பல்வேறு தரப்பினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்காக அர்ப்பணிப்பு செய்த அனைத்து தரப்பினருக்கும் தமது உளங்கனிந்த நன்றிகளை தெரிவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட இவ்வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் கொண்டு செல்வது தற்போதைய அரசாங்கத்தின் கடமை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum