Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஆரம்ப பிரிவை ஆரம்பிக்குமாறு கோரி நோர்வூட் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்

Go down

ஆரம்ப பிரிவை ஆரம்பிக்குமாறு கோரி நோர்வூட் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் Empty ஆரம்ப பிரிவை ஆரம்பிக்குமாறு கோரி நோர்வூட் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்

Post by oviya Mon Jun 08, 2015 2:22 pm

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவை ஆரம்பிக்குமாறு கோரி பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் தெரிவுசெய்யப்பட்ட ஆயிரம் பாடசாலைகளின் கீழ் ஒவ்வொரு பாடசாலைகளிலும் தனியான ஆரம்ப பிரிவு ஆரம்பிக்கப்பட்டு அதற்கு தனியான அதிபர் நியமிக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



அந்தவகையில் ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயமும் ஆயிரம் பாடசாலைகளில் இணைக்கப்பட்ட போதிலும் இப்பாடசாலைக்கான ஆரம்ப பிரிவு இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.

இப்பாடசாலையில் ஆரம்ப பிரிவை ஆரம்பிக்குமாறு நோர்வூட் பிரதேச பெற்றோர்கள் பல முறை சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இன்று குறித்த பிரதேச பெற்றோர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஹற்றன், பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட் எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு நோர்வூட் நகரம் வந்தடைந்ததுடன், மீண்டும் நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் பின் அவ்விடத்திற்கு வந்த இராஜாங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணணிடமும், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ராமிடமும் மகஜர் ஒன்று ஆர்ப்பாட்டகாரர்களால் கையளிக்கப்பட்டது.

மகஜரை கையளித்த பின் ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 6 மணி நேரம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum