Top posting users this month
No user |
எனது மகனுக்கு நவுருக்கு வெளியே சிகிச்சை அளியுங்கள்!– அகதித் தாய் கோரிக்கை
Page 1 of 1
எனது மகனுக்கு நவுருக்கு வெளியே சிகிச்சை அளியுங்கள்!– அகதித் தாய் கோரிக்கை
காயமடைந்த மகனுக்கு சிகிச்சையளிப்பதற்காக நவுரு தீவில் இருந்து வெளியேற அனுமதிக்குமாறு தாயொருவர் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்பட்ட நிலையில் நவுரு தீவு தடுப்பு முகாமில் இருந்து வெளியேறி சமூகத்தவர்களுடன் சேர்ந்து வாழும் தம்பதியின் பிள்ளையான இர்பான் பாரிதாரியின் விபத்தில் பாதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த மாதம் சைக்கிளில் இருந்து விழுந்த சமயம், இவரது கையெலும்பு முறிவடைந்தது. இந்தக் கை மென்மேலும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் துரித சத்திரசிகிச்சை அவசியமென மருத்துவர்கள் அறிவித்தார்கள்.
இர்பானுக்கு நவுரு வைத்தியசாலையில் தற்காலிக சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சரியான சத்திரசிகிச்சை கிடைக்காவிட்டால் இர்பானின் கையை முழுமையாக பயன்படுத்த முடியாமல் போய்விடுமென அவுஸ்திரேலிய நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அவர்கள் அகதிகளுக்கான மருத்துவர்கள் என்ற அமைப்பின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். இத்தகைய பின்னணியில், இர்பானின் தாய் மரியம் நிலைமையை விபரித்துள்ளார்.
தமது மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்களை அனுப்பி வைக்க அவுஸ்திரேலியா இணங்கியதாக குடிவரவு அதிகாரிகள் கூறினார்களென மரியம் குறிப்பிட்டார்.
எனினும், நவுரு வைத்தியசாலையில் மாத்திரம் மகனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டாமென அவர் வலியுறுத்தினார்.
இந்த வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்யக்கூடிய அளவிற்கு வசதிகள் எதுவும் கிடையாதென மரியம் கூறினார்.
அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்பட்ட நிலையில் நவுரு தீவு தடுப்பு முகாமில் இருந்து வெளியேறி சமூகத்தவர்களுடன் சேர்ந்து வாழும் தம்பதியின் பிள்ளையான இர்பான் பாரிதாரியின் விபத்தில் பாதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த மாதம் சைக்கிளில் இருந்து விழுந்த சமயம், இவரது கையெலும்பு முறிவடைந்தது. இந்தக் கை மென்மேலும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் துரித சத்திரசிகிச்சை அவசியமென மருத்துவர்கள் அறிவித்தார்கள்.
இர்பானுக்கு நவுரு வைத்தியசாலையில் தற்காலிக சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சரியான சத்திரசிகிச்சை கிடைக்காவிட்டால் இர்பானின் கையை முழுமையாக பயன்படுத்த முடியாமல் போய்விடுமென அவுஸ்திரேலிய நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அவர்கள் அகதிகளுக்கான மருத்துவர்கள் என்ற அமைப்பின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். இத்தகைய பின்னணியில், இர்பானின் தாய் மரியம் நிலைமையை விபரித்துள்ளார்.
தமது மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்களை அனுப்பி வைக்க அவுஸ்திரேலியா இணங்கியதாக குடிவரவு அதிகாரிகள் கூறினார்களென மரியம் குறிப்பிட்டார்.
எனினும், நவுரு வைத்தியசாலையில் மாத்திரம் மகனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டாமென அவர் வலியுறுத்தினார்.
இந்த வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்யக்கூடிய அளவிற்கு வசதிகள் எதுவும் கிடையாதென மரியம் கூறினார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum