Top posting users this month
No user |
Similar topics
நோன்பு கஞ்சி
Page 1 of 1
நோன்பு கஞ்சி
பச்சரிசி - முக்கால் கப்
கடலைப்பருப்பு - ஒரு கைப்பிடி
மட்டன் கைமா - 100 கிராம்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கேரட் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
தேங்காய் பால் - அரை கப்
பசும்பால் - அரை கப்
தாளிக்க:
வெங்காயம் - ஒன்று
சோம்புத் தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
மல்லித் தழை, உப்பு - தேவையான அளவு
அரிசியை களைந்து குக்கரில் போட்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றவும். அதனுடன் கடலைப்பருப்பு, மட்டன் கைமா, நறுக்கிய கேரட், பச்சை மிளகாய், வெந்தயம் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும்.
சாதம் நன்கு குழையும் வரை வேகவிடவும்.
பிறகு பசும்பால், தேங்காய் பால் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பின் சோம்புத் தூள் சேர்க்கவும். தாளித்தவற்றை கஞ்சியில் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும். கடைசியாக மல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான நோன்பு கஞ்சி தயார். இதனுடன் புதினா அல்லது ஏதாவது ஒரு துவையல் சேர்த்து சாப்பிடலாம்.
கடலைப்பருப்பு - ஒரு கைப்பிடி
மட்டன் கைமா - 100 கிராம்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கேரட் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
தேங்காய் பால் - அரை கப்
பசும்பால் - அரை கப்
தாளிக்க:
வெங்காயம் - ஒன்று
சோம்புத் தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
மல்லித் தழை, உப்பு - தேவையான அளவு
அரிசியை களைந்து குக்கரில் போட்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றவும். அதனுடன் கடலைப்பருப்பு, மட்டன் கைமா, நறுக்கிய கேரட், பச்சை மிளகாய், வெந்தயம் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும்.
சாதம் நன்கு குழையும் வரை வேகவிடவும்.
பிறகு பசும்பால், தேங்காய் பால் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பின் சோம்புத் தூள் சேர்க்கவும். தாளித்தவற்றை கஞ்சியில் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும். கடைசியாக மல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான நோன்பு கஞ்சி தயார். இதனுடன் புதினா அல்லது ஏதாவது ஒரு துவையல் சேர்த்து சாப்பிடலாம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum