Top posting users this month
No user |
Similar topics
சொத்துக்குவிப்பு வழக்கில் உடனே மேல்முறையீடு வேண்டும்: அட்வகேட் ஜெனரல் அதிரடி அறிக்கை!
Page 1 of 1
சொத்துக்குவிப்பு வழக்கில் உடனே மேல்முறையீடு வேண்டும்: அட்வகேட் ஜெனரல் அதிரடி அறிக்கை!
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டியது மிகவும் அவசியம் என்று கர்நாடக அட்வகேட் ஜெனரல் அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா மற்றும் கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்மகுமார் ஆகியோர் அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.
கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து இரு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
ஜெயலலிதா தற்போது தமிழக முதல்வராக பதவி வகிப்பதால் அவருக்கு எதிராக மேல் முறையீடு செய்ய ஆளுநர் அல்லது உச்ச நீதிமன்றத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டுமா? என்பது ஒரு சந்தேகம்.
உச்ச நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக தற்போது நியமிக்கப்பட்ட ஆச்சாரியாவையே தொடரச் செய்ய முடியுமா, அதற்கான அதிகாரம் கர்நாடகாவுக்கு உள்ளதா என்பது மற்றொரு சந்தேகம் ஆகும்.
தற்போது இந்த சந்தேகங்களுக்கும் ரவிவர்மகுமார் விளக்கம் அளித்து நேற்று அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார்.
அதில் 2003ம் ஆண்டில், சொத்துக்குவிப்பு வழக்கை தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம், கர்நாடக நீதித்துறை மீதும், இம்மாநிலத்தின் மீதும் கொண்ட நம்பிக்கைதான் காரணம்.
சொத்துக்குவிப்பு வழக்கை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தால்தான் கர்நாடகா மீதான நம்பிக்கை காப்பாற்றப்படும். எனவே, உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மேல்முறையீடு செய்வது அதன் கடமையாகும்.
உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மேல்முறையீடு செய்யாவிட்டால், கர்நாடக மாநிலம் மீது உச்சநீதிமன்றம் வைத்துள்ள நம்பிக்கைக்கு துரோகம் செய்வதைப்போல ஆகிவிடும்.
எனவே, கூடிய விரைவில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் ஆச்சாரியாவையே சிறப்பு வழக்கறிஞராக கர்நாடகம் தொடரச் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா மற்றும் கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்மகுமார் ஆகியோர் அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.
கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து இரு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
ஜெயலலிதா தற்போது தமிழக முதல்வராக பதவி வகிப்பதால் அவருக்கு எதிராக மேல் முறையீடு செய்ய ஆளுநர் அல்லது உச்ச நீதிமன்றத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டுமா? என்பது ஒரு சந்தேகம்.
உச்ச நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக தற்போது நியமிக்கப்பட்ட ஆச்சாரியாவையே தொடரச் செய்ய முடியுமா, அதற்கான அதிகாரம் கர்நாடகாவுக்கு உள்ளதா என்பது மற்றொரு சந்தேகம் ஆகும்.
தற்போது இந்த சந்தேகங்களுக்கும் ரவிவர்மகுமார் விளக்கம் அளித்து நேற்று அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார்.
அதில் 2003ம் ஆண்டில், சொத்துக்குவிப்பு வழக்கை தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம், கர்நாடக நீதித்துறை மீதும், இம்மாநிலத்தின் மீதும் கொண்ட நம்பிக்கைதான் காரணம்.
சொத்துக்குவிப்பு வழக்கை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தால்தான் கர்நாடகா மீதான நம்பிக்கை காப்பாற்றப்படும். எனவே, உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மேல்முறையீடு செய்வது அதன் கடமையாகும்.
உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மேல்முறையீடு செய்யாவிட்டால், கர்நாடக மாநிலம் மீது உச்சநீதிமன்றம் வைத்துள்ள நம்பிக்கைக்கு துரோகம் செய்வதைப்போல ஆகிவிடும்.
எனவே, கூடிய விரைவில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் ஆச்சாரியாவையே சிறப்பு வழக்கறிஞராக கர்நாடகம் தொடரச் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு: கர்நாடக அரசு இன்று முடிவு
» சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா மேல்முறையீடு: தலைவர்கள் வரவேற்பு!
» சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு: ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோகுமா?
» சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா மேல்முறையீடு: தலைவர்கள் வரவேற்பு!
» சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு: ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோகுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum