Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்தியா- பாகிஸ்தானை இணைக்கும் வாகா எல்லை

Go down

இந்தியா- பாகிஸ்தானை இணைக்கும் வாகா எல்லை  Empty இந்தியா- பாகிஸ்தானை இணைக்கும் வாகா எல்லை

Post by oviya Fri May 29, 2015 3:12 pm

இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அம்ரித்ஸர் நகருக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் நகருக்கு இடையில் அமைத்துள்ள ஒரு சிறிய கிராமம் வாகா.
பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் இங்குள்ள எல்லையே வாகா எல்லையாகும்.

கடந்த 1947 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் தனியாக பிரிக்கப்பட்டபோது கிழக்கு வாகா இந்தியாவுக்கு மேற்கு வாக பாகிஸ்தான் நாட்டுக்கு என வகுக்கப்பட்டது அதன்படியான ராட்கிளிஃப் கோடு இந்த கிராமத்தின் வழியாக செல்கின்றது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தனித்தனியாக பிரிய முடிவு செய்தபோது இருநாட்டுக்கும் பொதுவான எல்லையை வகுப்பதில் பிரித்தானியாவை சேர்ந்த வழக்கறிஞரான சிரில் ராட்கிளிஃப் முக்கிய பங்காற்றினார்.

அவர் நினைவாகவே இந்த கோடு ராட்கிளிப்ஃ கோடு எனப்படுகிறது. இந்த வாகா எல்லை இந்தியாவின் அம்ரித்ஸரில் இருந்து 32 கிலோமீற்றர் தொலைவிலும் பாகிஸ்தானில் லாகூரில் இருந்து 24 கிலோமீற்றர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இந்த எல்லையில் தினத்தோறும் இருநாட்டு ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெறும்.



இந்த அணிவகுப்பை பார்ப்பதற்காக இருநாட்டு எல்லைகளிலும் ஏராளமான மக்கள் குவிவார்கள். தினமும் சூரிய அஸ்தமனத்துக்கு 2 மணி நேரங்கள் முன்பாக இந்த அணிவகுப்பு தொடங்கும்.

இதில் இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படைவீரர்களும் பாகிஸ்தானின் ரெஞ்சர்ஸ் வீரர்களும் கலந்துகொண்டு தங்களின் கம்பீரமான அணிவகுப்பை நடத்துவார்கள்.

இருநாட்டு எல்லையிலும் கூடியிருக்கும் மக்கள் தங்கள் நாட்டு வீரர்களில் அணிவகுப்பின் போது மகிழ்ச்சியாக பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்றும் ஜெய்ஹிந்த் என்றும் கோஷமிட்டு அவர்களை உற்சாகப்படுத்துவார்கள்.



அணிவகுப்பு முடிந்த பின்னர் தங்களது நாட்டின் கொடியை கம்பத்தில் இருந்து வீரர்கள் இறக்குவார்கள். பின்னர் இரு நாட்டு வீரர்களும் பரஸ்பரமாக கைகுலுக்கி கொள்வார்கள்.

இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக உள்ளூர் மக்கள் மட்டுமில்லாது ஏராளமான சுற்றுலா பயணிகளும் அங்கு குவிவார்கள்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum