Top posting users this month
No user |
Similar topics
அவரைக்காய் மசாலா
Page 1 of 1
அவரைக்காய் மசாலா
அவரைக்காய் - அரை கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - இரண்டு
பூண்டு - இரண்டு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
கடுகு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கு
அரைக்க:
தேங்காய் பூ - 2 தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
சோம்பு - கால் தேக்கரண்டி
வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்.
அவரைக்காயை கழுவி நறுக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதில் மஞ்சள் தூள், சிறிது உப்பு தூவி நறுக்கின அவரைக்காயை சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி குழைந்ததும் மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கிய பின் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். ஏற்கனவே அவரைக்காய் வதக்கியதால் சீக்கிரம் வெந்துவிடும்.
காய் வெந்ததும் அரைத்த தேங்காய், மிளகு, சோம்பு விழுது சேர்க்கவும்.
நன்கு கொதித்தவுடன் உப்பு, காரம் சரிப்பார்த்து அடுப்பை நிறுத்தி விடவும்.
சுவையான அவரைக்காய் மசாலா தயார். இது சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிடலாம்.
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - இரண்டு
பூண்டு - இரண்டு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
கடுகு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கு
அரைக்க:
தேங்காய் பூ - 2 தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
சோம்பு - கால் தேக்கரண்டி
வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்.
அவரைக்காயை கழுவி நறுக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதில் மஞ்சள் தூள், சிறிது உப்பு தூவி நறுக்கின அவரைக்காயை சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி குழைந்ததும் மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கிய பின் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். ஏற்கனவே அவரைக்காய் வதக்கியதால் சீக்கிரம் வெந்துவிடும்.
காய் வெந்ததும் அரைத்த தேங்காய், மிளகு, சோம்பு விழுது சேர்க்கவும்.
நன்கு கொதித்தவுடன் உப்பு, காரம் சரிப்பார்த்து அடுப்பை நிறுத்தி விடவும்.
சுவையான அவரைக்காய் மசாலா தயார். இது சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிடலாம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum