Top posting users this month
No user |
Similar topics
தக்காளி குருமா
Page 1 of 1
தக்காளி குருமா
தக்காளி - ஐந்து அல்லது ஆறு (சுமாரான அளவு)
பெரிய வெங்காயம் - இரண்டு(சுமாரான அளவு)
ஃபுரோசன் பச்சைபட்டாணி - இரண்டு மேசைக்கரண்டி
நசுக்கிய இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு
நசுக்கிய பூண்டு - இரண்டு பற்கள்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - கால் கோப்பை
பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை - தலா இரண்டு
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
அரைக்க:
தேங்காய்ப்பூ - ஒரு கோப்பை
கசகசா - இரண்டு தேக்கரண்டி
சோம்பு - இரண்டு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் - நான்கு
மிளகாய்தூள் - ஒருதேக்கரண்டி
தனியாத்தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
தக்காளியை சுடுநீரில் போட்டு இரண்டு நிமிடம் வேகவிட்டு அதன் தோலை நீக்கி, நன்கு கரைத்து வைக்கவும்.
மிக்ஸியில் அரைக்கத் தேவையான பொருட்களைப் போட்டு மையாக அரைத்து தக்காளி கரைசலில் சேர்த்து, இரண்டு கோப்பை நீரையும் ஊற்றி கலக்கி வைக்கவும்.
இஞ்சிப் பூண்டை நசுக்கிவைக்கவும். வெங்காயத்தை சற்று பெரியத் துண்டுகளாக்கவும்.
சட்டியில் எண்ணெயைக் காயவைத்து வாசனைப் பொருட்களைப் போட்டு வறுத்து வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு அதில் தக்காளி கரைசலை ஊற்றி உப்பைப் போட்டு நன்கு கலக்கிவிட்டு கொதிக்கவிடவும்.
குருமா கொதித்து கெட்டிபதம் வந்தவுடன் பட்டாணி மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கிவிடவும்.
இந்த சுவையான குருமா இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுக்கு நல்லபொருத்தமாக இருக்கும்.
பெரிய வெங்காயம் - இரண்டு(சுமாரான அளவு)
ஃபுரோசன் பச்சைபட்டாணி - இரண்டு மேசைக்கரண்டி
நசுக்கிய இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு
நசுக்கிய பூண்டு - இரண்டு பற்கள்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - கால் கோப்பை
பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை - தலா இரண்டு
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
அரைக்க:
தேங்காய்ப்பூ - ஒரு கோப்பை
கசகசா - இரண்டு தேக்கரண்டி
சோம்பு - இரண்டு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் - நான்கு
மிளகாய்தூள் - ஒருதேக்கரண்டி
தனியாத்தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
தக்காளியை சுடுநீரில் போட்டு இரண்டு நிமிடம் வேகவிட்டு அதன் தோலை நீக்கி, நன்கு கரைத்து வைக்கவும்.
மிக்ஸியில் அரைக்கத் தேவையான பொருட்களைப் போட்டு மையாக அரைத்து தக்காளி கரைசலில் சேர்த்து, இரண்டு கோப்பை நீரையும் ஊற்றி கலக்கி வைக்கவும்.
இஞ்சிப் பூண்டை நசுக்கிவைக்கவும். வெங்காயத்தை சற்று பெரியத் துண்டுகளாக்கவும்.
சட்டியில் எண்ணெயைக் காயவைத்து வாசனைப் பொருட்களைப் போட்டு வறுத்து வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு அதில் தக்காளி கரைசலை ஊற்றி உப்பைப் போட்டு நன்கு கலக்கிவிட்டு கொதிக்கவிடவும்.
குருமா கொதித்து கெட்டிபதம் வந்தவுடன் பட்டாணி மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கிவிடவும்.
இந்த சுவையான குருமா இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுக்கு நல்லபொருத்தமாக இருக்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum