Top posting users this month
No user |
பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரர் கைது
Page 1 of 1
பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரர் கைது
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், குருந்துவத்த பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞானசார தேரரை கைது செய்யுமாறு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றத் தடையை மீறி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த 2 வாரத்திற்கு முன்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் ஞானசார தேரர் நீதிமன்றில் ஆஜராகாது வெளிநாடு சென்றிருந்தார்.
வெளிநாடு சென்றிருந்த அவர் நாடு திரும்பிய வேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, குறுந்துவத்த பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞானசார தேரர் பிணையில் விடுதலை
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றம் விதித்திருந்த தடையை மீறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொதுபல சேனா அமைப்பின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் ஞானசார தேரர் ஆஜராகவில்லை. இதனையடுத்தே நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. வெளிநாடு சென்றிருந்த ஞானசார தேரர் இன்று கறுவாத்தோட்டம் காவற்துறை நிலையத்தில் சரணடைந்தார்.
இதனையடுத்து அவரை கைது செய்த காவற்துறையினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
ஞானசார தேரரை கைது செய்யுமாறு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றத் தடையை மீறி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த 2 வாரத்திற்கு முன்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் ஞானசார தேரர் நீதிமன்றில் ஆஜராகாது வெளிநாடு சென்றிருந்தார்.
வெளிநாடு சென்றிருந்த அவர் நாடு திரும்பிய வேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, குறுந்துவத்த பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞானசார தேரர் பிணையில் விடுதலை
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றம் விதித்திருந்த தடையை மீறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொதுபல சேனா அமைப்பின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் ஞானசார தேரர் ஆஜராகவில்லை. இதனையடுத்தே நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. வெளிநாடு சென்றிருந்த ஞானசார தேரர் இன்று கறுவாத்தோட்டம் காவற்துறை நிலையத்தில் சரணடைந்தார்.
இதனையடுத்து அவரை கைது செய்த காவற்துறையினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum