Top posting users this month
No user |
Similar topics
ஸ்டஃப்டு குடமிளகாய்
Page 1 of 1
ஸ்டஃப்டு குடமிளகாய்
குடமிளகாய் - 6
கடலை மாவு - அரை கப்
தனியாப்பொடி - ஒரு மேசைக்கரண்டி
சீரகப் பொடி - ஒரு தேக்கரண்டி
கரம்மசாலா - ஒரு தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - இரண்டு
நறுக்கிய பச்சைமிளகாய் - இரண்டு
புளி - எலுமிச்சம்பழ அளவு
தேங்காய்ப் பால் - இரண்டுகப்
நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - நான்கு மேசைக்கரண்டி
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையானது
முதலில் வெறும் பாத்திரத்தில் கடலை மாவை பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒவ்வொரு குடமிளகாயின் நடுவில் உள்ள சதை பகுதியை கீறி வைத்துக் கொள்ளவும்.
இஞ்சி, மிளகாய், வெங்காயம் இவற்றை தனியாக வதக்கி மாவுடன் கலந்து உப்பு, கரம்மசாலா, மிளகாய்ப்பொடி, தனியாப்பொடி, கொத்தமல்லி, சீரகப்பொடி முதலியவற்றையும் கலந்துக் கொள்ளவும்.
பிறகு ஒவ்வொரு குடமிளகாய்க்குள்ளும் பொடிக் கலவைகளை நிரப்பவும். வாணலியில் எண்ணெய் விட்டு, குடமிளகாய்களைப் போட்டு, மெதுவான தீயில் நிறம்மாறும் வரை சிதைந்து போகாமல் வதக்கவும்.
நன்றாக வதங்கிய பின் புளி தண்ணீர் அரை கப் தேங்காய்ப் பால் 2 கப் இரண்டையும் இதனுடன் சேர்த்து மூடியினால் மூடி வைக்கவும்.
மிளகாய் மெத்தென்று ஆகி, கலவையும் சற்றே கெட்டியான பின் இறக்கி அரை கப் தேங்காய் துருவல், கொத்தமல்லி இரண்டையும் தூவவும்.
இதே போல் உருளைக்கிழங்கைப் பொடிமாஸ் போல் செய்துகொண்டு வெங்காயம், கரம்மசாலா சேர்த்து வதக்கி, குடமிளகாயில் அடைத்து முன் சொன்னது போல் எண்ணெய் விட்டு நன்றாக வதக்கி எடுக்கலாம்.
இதற்கு புளித்தண்ணீரோ தேங்காய்ப் பாலோ தேவையில்லை. குடமிளகாய் நன்றாக வதங்கி சாப்பிட ருசியாக இருக்கும்.
கடலை மாவு - அரை கப்
தனியாப்பொடி - ஒரு மேசைக்கரண்டி
சீரகப் பொடி - ஒரு தேக்கரண்டி
கரம்மசாலா - ஒரு தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - இரண்டு
நறுக்கிய பச்சைமிளகாய் - இரண்டு
புளி - எலுமிச்சம்பழ அளவு
தேங்காய்ப் பால் - இரண்டுகப்
நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - நான்கு மேசைக்கரண்டி
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையானது
முதலில் வெறும் பாத்திரத்தில் கடலை மாவை பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒவ்வொரு குடமிளகாயின் நடுவில் உள்ள சதை பகுதியை கீறி வைத்துக் கொள்ளவும்.
இஞ்சி, மிளகாய், வெங்காயம் இவற்றை தனியாக வதக்கி மாவுடன் கலந்து உப்பு, கரம்மசாலா, மிளகாய்ப்பொடி, தனியாப்பொடி, கொத்தமல்லி, சீரகப்பொடி முதலியவற்றையும் கலந்துக் கொள்ளவும்.
பிறகு ஒவ்வொரு குடமிளகாய்க்குள்ளும் பொடிக் கலவைகளை நிரப்பவும். வாணலியில் எண்ணெய் விட்டு, குடமிளகாய்களைப் போட்டு, மெதுவான தீயில் நிறம்மாறும் வரை சிதைந்து போகாமல் வதக்கவும்.
நன்றாக வதங்கிய பின் புளி தண்ணீர் அரை கப் தேங்காய்ப் பால் 2 கப் இரண்டையும் இதனுடன் சேர்த்து மூடியினால் மூடி வைக்கவும்.
மிளகாய் மெத்தென்று ஆகி, கலவையும் சற்றே கெட்டியான பின் இறக்கி அரை கப் தேங்காய் துருவல், கொத்தமல்லி இரண்டையும் தூவவும்.
இதே போல் உருளைக்கிழங்கைப் பொடிமாஸ் போல் செய்துகொண்டு வெங்காயம், கரம்மசாலா சேர்த்து வதக்கி, குடமிளகாயில் அடைத்து முன் சொன்னது போல் எண்ணெய் விட்டு நன்றாக வதக்கி எடுக்கலாம்.
இதற்கு புளித்தண்ணீரோ தேங்காய்ப் பாலோ தேவையில்லை. குடமிளகாய் நன்றாக வதங்கி சாப்பிட ருசியாக இருக்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum