Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!

Go down

இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! Empty இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!

Post by oviya Sat May 23, 2015 1:23 pm

மாணவி வித்தியாவின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 20ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடந்த பூரண ஹர்த்தால் நடவடிக்கையின் போது, யாழ்ப்பாண நீதிமன்றம் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது
.யாழ்ப்பாண நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பலருக்கு வேதனையைத் தந்தது. நீதித்துறை ஒன்றே நமக்குத் துணை என்ற நிலையில், நீதி மன்றத்தின் மீது தாக்குதல் நடத்துவது என்பது கண்டிக்கத்தக்கது.

அதேநேரம் ஏகப்பட்டவர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கைது செய்யப்பட்ட 130 இளைஞர்களே அத்தாக்குதலில் ஈடுபட்டனர் என்று அறுதியிட்டுக் கூறுவதும் முடியாத காரியம்.

அதேநேரம் கைது செய்யப்பட்ட 130 இளைஞர்களும் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போதைய ஆட்சி மைத்திரிபால சிறிசேனவுடைய தாயினும், அநுராதபுரத்தில் இருக்கக்கூடிய பொலிஸார் இன்னமும் பேரினவாத சிந்தையுடையவர்களாக இருக்கலாம்.

ஒரு காலத்தில் தமிழ் இளைஞர்களை தென்பகுதிச் சிறைச்சாலைகளுக்கு இடமாற்றியபோது அவர்களை வட பகுதிச் சிறைச்சாலைகளுக்கு இடம்மாற்றுங்கள் என்று குரல்கொடுத்தவர்கள் நாங்கள்.

ஆனால், இன்று யாழ்ப்பாணத்து இளைஞர்களை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதாக நிலைமை மாறிவிட்டது.

யாழ்ப்பாண நீதிமன்றத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் அவர்கள், பொலிஸ் உயரதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவைப் பொலிஸார் நிறைவேற்றிருந்தால் இத்தகையதொரு அனர்த்தம் ஒருபோதும் ஏற்பட்டிருக்காது. நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றுவது பொலிஸாரின் தலையாய கடமை.

எனவே, யாழ்ப்பாண நீதிபதி சிவகுமார் அவர்களின் அறிக்கை தொடர்பில், யாழ்ப்பாண சட்டத்தரணிகள் கவனம் செலுத்தாமல் 130 இளைஞர்களின் விடுதலைக்கு எதிராக குரல்கொடுப்பது நியாயமாகுமா?

130 தமிழ் இளைஞர்களை அநுராதபுரம் சிறைக்கு அனுப்புவதன் மூலம் இவர்கள் அங்குள்ள பொலிஸாரால், அங்கு ஏற்கெனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளால் தாக்கப்படக்கூடிய சந்தர்ப்பம் உண்டு.

130 இளைஞர்களும் யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது, அவர்கள்மீது பொலிஸார் தாக்குதல் நடத்துவார்களாக இருந்தால் அது தொடர்பில் யாழ்ப்பாண நீதிமன்றில் நீதிபதியிடம் முறையிட முடியும்.

ஆனால் இத்தகைய சம்பவங்கள் அநுராதபுரத்தில் நடந்தால் அதற்கான முறையீடுகள் எவ்வாறு பொருள் கொள்ளப்படும் என்பது ஆய்வுக்குரியது.

அதேநேரம் யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரத்திற்கு அனுப்பப்பட்ட இளைஞர்களை விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்திற்கு துணை நிற்பவர்களாகவே அங்குள்ளவர்கள் கருதலாம்.

இதேநேரம் கைதான 130 இளைஞர்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதுவும் பேசவில்லை. இளைஞர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கண்ணுற்றவர்களுக்கு விடுதலைப் புலிகள் மீள வந்து விடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டுவிட்டது.

இதன் காரணமாக இவர்கள் மெளனம் காக்கின்றனர். 130 இளைஞர்களின் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் இந்த 130 பேருமே நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினார்களா என்பதை உறுதி செய்திருக்க வேண்டும்.

நீதிமன்றத்தின்மீதான தாக்குதல் தொடர்பில் ஆத்திரம் அடைவது நியாயமானது. ஆனால், அந்த ஆத்திரத்தை 130 இளைஞர்கள் மீது திசை திருப்புவது நல்லதல்ல.

யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு அத்திபாரம் இட்ட போது அத்திபாரத்தில் இடப்பட்ட சங்கு, நவதானியம் என அனைத்தையும் தோண்டி எடுத்து நல்லூரில் கொண்டுபோய் போட்ட போது நல்லம், நல்லம் என்று கூறிய சிலர் இப்போது இளைஞர்களின் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதுதான் விசித்திரமாக உள்ளது.

எதுவாயினும் அநுராதபுரம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள 130 தமிழ் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது கட்டாயமானதாகும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum