Top posting users this month
No user |
Similar topics
கருணைக்கிழங்கு பொரியல்
Page 1 of 1
கருணைக்கிழங்கு பொரியல்
கருணைக்கிழங்கு - அரைக் கிலோ
பெரிய வெங்காயம் - 2
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சோம்புத் தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 6 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
கருணைக்கிழங்கை தோல் சீவி மண் வாசனைப் போக கழுவி விடவும்.
பின்பு குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை தனித்தனியே பொன்னிறமாக வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வெந்த கிழங்கை சிறு, சிறுத் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வறுத்தவற்றை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் மசாலா தூள் வகைகளை சேர்த்து வதக்கி விட்டு நறுக்கி வைத்திருக்கும் கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டவும்.
அடுப்பை மிதமான தீயில் பத்து நிமிடம் அப்படியே வைக்கவும். இடையில் ஒரு முறை கிளறவும். கிழங்கு பொன்னிறமானதும், வறுத்து பொடித்த தூளை தூவி பிரட்டி விட்டு, உப்பு சரிப் பார்த்து விட்டு மேலும் ஐந்து நிமிடம் அப்படியே வைத்திருக்கவும்.
கிழங்கு நன்கு உதிரியாய் வந்ததும் இறக்கி விடவும். சுவையான கருணைக்கிழங்கு பொரியல் தயார்.
பெரிய வெங்காயம் - 2
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சோம்புத் தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 6 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
கருணைக்கிழங்கை தோல் சீவி மண் வாசனைப் போக கழுவி விடவும்.
பின்பு குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை தனித்தனியே பொன்னிறமாக வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வெந்த கிழங்கை சிறு, சிறுத் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வறுத்தவற்றை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் மசாலா தூள் வகைகளை சேர்த்து வதக்கி விட்டு நறுக்கி வைத்திருக்கும் கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டவும்.
அடுப்பை மிதமான தீயில் பத்து நிமிடம் அப்படியே வைக்கவும். இடையில் ஒரு முறை கிளறவும். கிழங்கு பொன்னிறமானதும், வறுத்து பொடித்த தூளை தூவி பிரட்டி விட்டு, உப்பு சரிப் பார்த்து விட்டு மேலும் ஐந்து நிமிடம் அப்படியே வைத்திருக்கவும்.
கிழங்கு நன்கு உதிரியாய் வந்ததும் இறக்கி விடவும். சுவையான கருணைக்கிழங்கு பொரியல் தயார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum