Top posting users this month
No user |
Similar topics
பாகற்காய் பச்சடி
Page 1 of 1
பாகற்காய் பச்சடி
பெரிய பாகற்காய் - 100 கிராம்
வெல்லம் - ஒன்றரை மேசைக்கரண்டி
புளி தண்ணீர் - அரை கப்
பச்சை மிளகாய் - 7
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
அரிசி மாவு - ஒரு மேசைக்கரண்டி
பாகற்காயை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெந்ததும் அதில் உள்ள தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். வெல்லத்தை நுணுக்கிக் கொள்ளவும். புளி கரைசல் மற்றும் அரிசி மாவு எடுத்து வைக்கவும்.
பச்சை மிளகாயை இரண்டாக கீறி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலையை தண்ணீரில் அலசிக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கின பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு ஒரு நிமிடம் கழித்து வேக வைத்த பாகற்காயை போடவும். அதனுடன் பாகற்காய் வடித்து எடுத்த தண்ணீரில் கால் கப் தண்ணீரை அதில் ஊற்றவும். பிறகு கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
அதன் பின்னர் ஒரு கொதி வந்ததும் வெல்லம் போட்டு கரைய விடவும்.
வெல்லம் கரைந்ததும் அதனுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு அரிசிமாவை கால் கப் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். அதை கொதிக்கும் பாகற்காயுடன் ஊற்றி 4 நிமிடம் கொதிக்க விடவும். 4 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
பாகற்காய் பச்சடியை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இதில் புளி மற்றும் வெல்லம் சேர்ப்பதால் பாகற்காயில் உள்ள கசப்பு தன்மை போய்விடும். இதை பெரிய பாகற்காய் வைத்து செய்ய வேண்டும்.
வெல்லம் - ஒன்றரை மேசைக்கரண்டி
புளி தண்ணீர் - அரை கப்
பச்சை மிளகாய் - 7
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
அரிசி மாவு - ஒரு மேசைக்கரண்டி
பாகற்காயை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெந்ததும் அதில் உள்ள தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். வெல்லத்தை நுணுக்கிக் கொள்ளவும். புளி கரைசல் மற்றும் அரிசி மாவு எடுத்து வைக்கவும்.
பச்சை மிளகாயை இரண்டாக கீறி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலையை தண்ணீரில் அலசிக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கின பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு ஒரு நிமிடம் கழித்து வேக வைத்த பாகற்காயை போடவும். அதனுடன் பாகற்காய் வடித்து எடுத்த தண்ணீரில் கால் கப் தண்ணீரை அதில் ஊற்றவும். பிறகு கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
அதன் பின்னர் ஒரு கொதி வந்ததும் வெல்லம் போட்டு கரைய விடவும்.
வெல்லம் கரைந்ததும் அதனுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு அரிசிமாவை கால் கப் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். அதை கொதிக்கும் பாகற்காயுடன் ஊற்றி 4 நிமிடம் கொதிக்க விடவும். 4 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
பாகற்காய் பச்சடியை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இதில் புளி மற்றும் வெல்லம் சேர்ப்பதால் பாகற்காயில் உள்ள கசப்பு தன்மை போய்விடும். இதை பெரிய பாகற்காய் வைத்து செய்ய வேண்டும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum