Top posting users this month
No user |
தோழியின் குளியலறையில் மொடல் அழகி மரணம்: பின்னணி என்ன?
Page 1 of 1
தோழியின் குளியலறையில் மொடல் அழகி மரணம்: பின்னணி என்ன?
மும்பையில் மொடல் அழகி ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் மரணமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 8 வருடங்களாக மும்பையில் வசித்து வரும் டெல்லியைச் சேர்ந்த ஷிகா ஜோஷி(30) என்பவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வெர்சோவாவில் உள்ள தன் தோழியின் குடியிருப்பில் குடி புகுந்தார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை, தனது வீட்டில் உள்ள குளியலறையில் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ஷிகா கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தோழி மது, உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஷிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து, மும்பை பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்து போன தனது தோழி ஷிகா சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாக மது, பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷிகாவின் சகோதரர் கூறியதாவது, சில வருடங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள மருத்துவரிடம் ஷிகா சென்ற போது அவர், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பொலிசில் புகார் அளித்திருந்தார்.
தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் அந்த வழக்கை வாபஸ் பெறுமாறு சிலர் மிரட்டியதால் ஷிகா கடும் நெருக்கடிக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 8 வருடங்களாக மும்பையில் வசித்து வரும் டெல்லியைச் சேர்ந்த ஷிகா ஜோஷி(30) என்பவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வெர்சோவாவில் உள்ள தன் தோழியின் குடியிருப்பில் குடி புகுந்தார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை, தனது வீட்டில் உள்ள குளியலறையில் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ஷிகா கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தோழி மது, உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஷிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து, மும்பை பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்து போன தனது தோழி ஷிகா சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாக மது, பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷிகாவின் சகோதரர் கூறியதாவது, சில வருடங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள மருத்துவரிடம் ஷிகா சென்ற போது அவர், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பொலிசில் புகார் அளித்திருந்தார்.
தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் அந்த வழக்கை வாபஸ் பெறுமாறு சிலர் மிரட்டியதால் ஷிகா கடும் நெருக்கடிக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum