Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எதிர்வரும் சனியன்று ஜெயலலிதா பதவியேற்பு?

Go down

எதிர்வரும் சனியன்று ஜெயலலிதா பதவியேற்பு? Empty எதிர்வரும் சனியன்று ஜெயலலிதா பதவியேற்பு?

Post by oviya Sat May 16, 2015 1:18 pm

சென்னையில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் மே 23ம் தேதி ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்கக் கூடும் என கூறப்படுகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கடந்த 11ம் தேதியன்று தீர்ப்பளித்தது கர்நாடகா உயர்நீதிமன்றம்.

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக உடனே பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு வந்து 4 நாட்களாகியும் ஜெயலலிதா தொண்டர்களையோ பத்திரிகையாளர்களையோ சந்திக்கவில்லை.

தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், சட்டவல்லுநர்களுடன் தொடர்ந்து போயஸ் தோட்டத்தில் இருந்தபடியே ஜெயலலிதா ஆலோசனை நடத்தி வந்தார்.

மேலும் ஜெயலலிதாவை சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கும் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறும்.. நாளை நடைபெறும் என கடந்த 4 நாட்களாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று சனிக்கிழமை காலை அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 22ம் தேதி சென்னையில் கட்சி தலைமைக் கழகத்தில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் காலை 7 மணிக்கு நடைபெறும், இந்த கூட்டத்தில் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்களும் தவறமால் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்திருருந்தார்.

22ம் தேதி நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இதனைத் தொடர்ந்து முதல்வர் பன்னீர்செல்வம் தமது இராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுப்பார்; அப்போது சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதமும் ஆளுநரிடம் கொடுக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார். இந்த கூட்டம் மற்றும் சந்திப்புகளுக்கு மறுநாள் மே 23ம் தேதியன்று தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum