Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மூதூர், படுகாடுப் பகுதி வயல் காணியில் விவசாயிகள் வேளாண்மை செய்ய தடை

Go down

மூதூர், படுகாடுப் பகுதி வயல் காணியில் விவசாயிகள் வேளாண்மை செய்ய தடை Empty மூதூர், படுகாடுப் பகுதி வயல் காணியில் விவசாயிகள் வேளாண்மை செய்ய தடை

Post by oviya Fri May 15, 2015 2:14 pm

காணி உரிமை தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கும் வரை சர்ச்சைக்குரிய மூதூர், படுகாடு பகுதியிலுள்ள காணியில் விவசாயிகள் நெல் வேளாண்மையில் ஈடுபடுவதற்கு அதிகாரிகளினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டம் மூதூர் ,படுகாடு பகுதியிலுள்ள ஒரு பகுதி வயல் நிலங்களின் உரிமை தொடர்பாக தமிழ் மற்றும் சிங்கள விவசாயிகளுக்கிடையில் தொடர்ந்து சர்ச்சை நிலவுகின்றது.

இந்தக் காணி உரிமை தொடர்பாக ஆராய்வதற்காக விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்குமிடையில் நேற்று படுகாடு வயல் பகுதியில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

அந்தக் கூட்டத்தில் தீர்வுகள் எதுவும் எட்டப்படாததையடுத்து அதிகாரிகளினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூதூர் மற்றும் சேருவில பிரதேச செயலக பிரிவுகளின் எல்லையாக படுகாடு பகுதியுள்ள போதிலும் அதன் நிர்வாகம் மூதூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்டது.

போர் காலத்தில் தமிழ் விவசாயிகள் அந்த பகுதிக்கு செல்ல முடியாத நிலையில் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டு வந்த சிங்கள விவசாயிகள் தொடர்ந்தும் வேளாண்மையில் ஈடுபட்டு வருவதையடுத்தே தங்களின் காணி உரிமை மறுக்கப்படுவதாக தமிழ் விவசாயிகள் கூறுகின்றார்கள். காணி உரிமை தொடர்பான சட்டரீதியான ஆவணங்கள் அனைத்தும் தங்களிடம் இருப்பதாகவும் அவர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காணிகளில் தொடர்ந்தும் வேளாண்மையில் ஈடுபட்டுவருவதால் அரச முடிக்குரிய காணி என்பதில் அந்த உரிமை தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என சிங்கள விவசாயிகள் தரப்பு வாதிடுகின்றது.

இந்தக் காணிப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தர வேண்டும் என கோரி சில நாட்களுக்கு முன்னர் தமிழ் விவசாயிகள் மூதூர் பிரதேச செயலகம் முன்பாக ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி விவசாய பிரதிநிதிகள்( தமிழர் -2 ,முஸ்லிம்-1,சிங்களவர் - 2 ) , பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி அதிகாரிகள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் குமாரசாமி நாகேஸ்வரன் கூறுகின்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum