Top posting users this month
No user |
பாகற்காய் கூட்டு
Page 1 of 1
பாகற்காய் கூட்டு
பாகற்காய் - அரைக் கிலோ
கடலைப்பருப்பு - அரை கப்
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 4
தக்காளி - 4
தக்காளி விழுது - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 4 பற்கள்
தனியாத் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - 2 தேக்கரண்டி
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்து வேக வைக்கவும். பருப்பை கிள்ளு பதமாக வேக வைத்து வடிகட்டி வைக்கவும்.
பாகற்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து பிசறி அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் எடுத்து நன்கு கழுவி தண்ணீரை வடித்து விடவும்.
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி பூண்டை தட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகை போட்டு பொரிந்ததும் சீரகம் கறிவேப்பிலையை சேர்த்து தாளிக்கவும்.
பிறகு மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிவக்க வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
அதன் பின்னர் பாகற்காயை சிவக்க வதக்கி அதையும் ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் இஞ்சி பூண்டைப் போட்டு நன்கு வதக்கி விட்டு மஞ்சள் தூள், தனியாத் தூளைப் சேர்த்து அதை தொடர்ந்து பச்சை மிளகாய் மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு அதில் கிள்ளு பதமாக வெந்த கடலைப்பருப்பு, தக்காளி விழுது, வறுத்து வைத்துள்ள வெங்காயம், உப்பு மற்றும் ஒரு கப் பருப்பு வேக வைத்த தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பருப்பு முழுவதும் வெந்தவுடன் வறுத்த பாகற்காயைக் சேர்த்து நன்கு கலக்கி விட்டு மேலும் ஐந்து நிமிடம் வேக வைத்து இறக்கி விடவும்.
இந்த கூட்டை தேங்காய் எண்ணெயில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
கடலைப்பருப்பு - அரை கப்
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 4
தக்காளி - 4
தக்காளி விழுது - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 4 பற்கள்
தனியாத் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - 2 தேக்கரண்டி
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்து வேக வைக்கவும். பருப்பை கிள்ளு பதமாக வேக வைத்து வடிகட்டி வைக்கவும்.
பாகற்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து பிசறி அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் எடுத்து நன்கு கழுவி தண்ணீரை வடித்து விடவும்.
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி பூண்டை தட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகை போட்டு பொரிந்ததும் சீரகம் கறிவேப்பிலையை சேர்த்து தாளிக்கவும்.
பிறகு மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிவக்க வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
அதன் பின்னர் பாகற்காயை சிவக்க வதக்கி அதையும் ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் இஞ்சி பூண்டைப் போட்டு நன்கு வதக்கி விட்டு மஞ்சள் தூள், தனியாத் தூளைப் சேர்த்து அதை தொடர்ந்து பச்சை மிளகாய் மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு அதில் கிள்ளு பதமாக வெந்த கடலைப்பருப்பு, தக்காளி விழுது, வறுத்து வைத்துள்ள வெங்காயம், உப்பு மற்றும் ஒரு கப் பருப்பு வேக வைத்த தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பருப்பு முழுவதும் வெந்தவுடன் வறுத்த பாகற்காயைக் சேர்த்து நன்கு கலக்கி விட்டு மேலும் ஐந்து நிமிடம் வேக வைத்து இறக்கி விடவும்.
இந்த கூட்டை தேங்காய் எண்ணெயில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum