Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


லலித் வீரதுங்கவிடம் நாலரை மணி நேரம் விசாரணை

Go down

லலித் வீரதுங்கவிடம் நாலரை மணி நேரம் விசாரணை Empty லலித் வீரதுங்கவிடம் நாலரை மணி நேரம் விசாரணை

Post by oviya Thu May 14, 2015 1:53 pm

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினர் நேற்று விஷேட விசாரணையொன்றினை முன்னெடுத்தனர்.
பொலிஸ் தலைமையகத்தின் விஷேட விசாரணைப் பிரிவின் பணிப்பளர் பொலிஸ் அத்தியட்சர் மேவன் சில்வா தலமையிலான பொலிஸ் குழுவினரால் லலித் வீரதுங்க நான்கரை மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலைக் காரணமாக வீடுகளை இழந்த வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கவென ஜனாதிபதி செயலகத்தின் நேரடி மேற்பர்வையில் நிறுவப்பட்ட ராதா நிறுவனத்தின் ஊடாக பெரும் தொகையான நிதி மோசடி செய்யப்பட்டதாக முன்வக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து லலித் வீரதுங்கவிடம் விரிவாக விசாரிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

நேற்று காலை 9.00 மணிக்கு கோட்டையில் உள்ள பொலிஸ் தலமையகத்தின் விஷேட விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி செயலாளர் செயலாளர் லலித் வீரதுங்க பிற்பகல் 1.30 மணிவரை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த நாலரை மணி நேர காலப்பகுதியில் அவரிடம் வாக்கு மூலம் ஒன்றினையும் பதிவு செய்துகொண்ட பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினர் தேவை ஏற்படின் மீண்டும் அழைப்பதாக குறிப்பிட்டு அவரை விடுவித்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த ராடா நிறுவனத்தின் மிக முக்கியஸ்தர் ஒருவரிடம் விஷேட விசாரணைகளை பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவு முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் குறிப்பிட்டன.

இந்த சுனாமி வீடமைப்பு நிதி மோசடி தொடர்பில் சந்தேக நபர்கள் பலரை கைதுச் செய்யவுள்ளதாக நேற்று முன் தினம் கோட்டை பிரதான நீதிவான் பிரியந்த லியனகேயிடம் விஷேட விசாரணைப் பிரிவு பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் மேவன் சில்வா குறிப்பிட்டிருந்த நிலையிலேயே இந்த விசரணைகள் இடம்பெறுகின்றன.

முன்னதாக சுனாமியால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வீடமைத்துக் கொடுப்பதாக கூறி போலி ஆவணங்களை சமர்ப்பித்து ராதா நிறுவனம் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் தலைமையில் மில்லியன் கணக்கில் நிதி மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினர் தகவல்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

அதன்படி அந்த மோசடிகளுடன் தொடர்புடைய பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் உள்ளிட்ட ராதா நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் ஐவருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடையும் பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஊழல்களுக்கு எதிரான அமைப்பு பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனிடம் முன்வைத்த முறைப்பாட்டொன்றுக்கு அமைவாக , பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் மேவன் சில்வாவின் நேரடி கட்டுப்பாட்டில் கடந்த மூன்று மாதங்களாக இடம்பெற்றுவந்த விசாரணைகளின் விளைவாகவே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டுகின்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum