Top posting users this month
No user |
பைனாப்பிள் வெஜ் குருமா
Page 1 of 1
பைனாப்பிள் வெஜ் குருமா
நன்கு பழுத்த பைனாப்பிள் ---- 1 /2 (அரை பைனாப்பிள்)
காரட் ---- 2
பீன்ஸ் --- கால் கிலோ
பச்சை பட்டாணி (frozen) ---- 2 கைப்பிடி அளவு
குடை மிளகாய் 2
வெங்காயம் ஒன்று (பெரியது)
இஞ்சி ---- 2 இன்ச்
பூண்டு ----- 4 பல்
பச்சை மிளகாய் --- 4
கொத்தமல்லி --- சிறிதளவு
உப்பு தேவையான அளவு
கரம் மசாலா பொடி ---- ஒரு டீ ஸ்பூன்
சீரகம் ஒரு டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி அரை டீ ஸ்பூன்
எண்ணெய் 4 டீ ஸ்பூன்
முதலில் பைனாப்பிள், இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், காரட், பீன்ஸ், குடை மிளகாயை சன்னமாக நறுக்கிக் கொள்ளவும்.
முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு சீரகத்தைப் போட்டு பொரித்துக் கொள்ளவும். பிறகு மஞ்சள் பொடியை போட்டு உடனேயே வெங்காயத்தையும் போட்டு அது பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும். பிறகு, நறுக்கி வைத்துள்ள மற்ற காய்கறிகளையும் பச்சை பட்டாணியையும் போட்டு உப்பு மற்றும் கரம் மசாலா பொடியையும் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். அது பாதி வதங்கிய உடன் அரைத்து வைத்துள்ள பைனாப்பிள் கலவையையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இறக்கிய உடன் கொத்துமல்லி சேர்த்து சப்பாத்தியுடன் பரிமாறவும்.
காரட் ---- 2
பீன்ஸ் --- கால் கிலோ
பச்சை பட்டாணி (frozen) ---- 2 கைப்பிடி அளவு
குடை மிளகாய் 2
வெங்காயம் ஒன்று (பெரியது)
இஞ்சி ---- 2 இன்ச்
பூண்டு ----- 4 பல்
பச்சை மிளகாய் --- 4
கொத்தமல்லி --- சிறிதளவு
உப்பு தேவையான அளவு
கரம் மசாலா பொடி ---- ஒரு டீ ஸ்பூன்
சீரகம் ஒரு டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி அரை டீ ஸ்பூன்
எண்ணெய் 4 டீ ஸ்பூன்
முதலில் பைனாப்பிள், இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், காரட், பீன்ஸ், குடை மிளகாயை சன்னமாக நறுக்கிக் கொள்ளவும்.
முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு சீரகத்தைப் போட்டு பொரித்துக் கொள்ளவும். பிறகு மஞ்சள் பொடியை போட்டு உடனேயே வெங்காயத்தையும் போட்டு அது பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும். பிறகு, நறுக்கி வைத்துள்ள மற்ற காய்கறிகளையும் பச்சை பட்டாணியையும் போட்டு உப்பு மற்றும் கரம் மசாலா பொடியையும் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். அது பாதி வதங்கிய உடன் அரைத்து வைத்துள்ள பைனாப்பிள் கலவையையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இறக்கிய உடன் கொத்துமல்லி சேர்த்து சப்பாத்தியுடன் பரிமாறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum