Top posting users this month
No user |
பாவ் பாஜி
Page 1 of 1
பாவ் பாஜி
உருளைக்கிழங்கு - கால் கிலோ
கேரட் - ஒரு கோப்பை
பீன்ஸ் - ஒரு கோப்பை
பச்சைபட்டாணி - அரைக்கோப்பை
காலிஃப்ளவர் - ஒரு கோப்பை
வெங்காயம் - ஒன்று
தக்காளி - இரண்டு
பச்சைமிளகாய் - நான்கு
இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
பூண்டு - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சைரசம் - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி - அரைக்கட்டு
வெண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
பன் - நான்கு
உருளைக்கிழங்கின் தோலை சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு அதனுடன் காலிஃப்ளவரை தவிர்த்து மற்ற எல்லாக் காய்களையும் சேர்த்து கொதிக்கும் நீரில் போட்டு நன்கு வேகவைத்து நீரைவடித்து விட்டு ஒன்றும் பாதியுமாக மசித்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாயகன்ற சட்டியில் வெண்ணெய், எண்ணெயை கலந்து ஊற்றி காயவைத்து சோம்பைப் போடவும். தொடர்ந்து வெங்காயம், பச்சைமிளகாயைப் போட்டு நன்கு வறுக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டைப் போட்டு வதக்கி தக்காளியை சேர்த்து நன்கு மையாக வதக்கவும்.
பிறகு காலிஃப்ளவரைப்போட்டு நன்கு வதக்கி அவை வெந்தவுடன் எல்லாத்தூளையும் போட்டு உப்பைச் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
பிறகு மசித்த காய்களைப் போட்டு நன்கு கிளறி கால் கோப்பை நீரை ஊற்றி அனலைக் குறைத்து வைத்து வேகவிடவும்.
மசாலா நன்கு கலந்து கெட்டியாக ஆனதும், எலுமிச்சைரசத்தை தெளித்து கொத்தமல்லியை தூவி கிளறி விட்டு இறக்கி விடவும்.
பிறகு பாவ்/பன்னை இரண்டாக நறுக்கி சூடான தோசைகல்லில் போட்டு சூடாக்கி வெண்ணெயைத் தடவி தயாரித்த மசாலாவை அதன் நடுவில் வைத்து சூடாக பரிமாறவும்.
கேரட் - ஒரு கோப்பை
பீன்ஸ் - ஒரு கோப்பை
பச்சைபட்டாணி - அரைக்கோப்பை
காலிஃப்ளவர் - ஒரு கோப்பை
வெங்காயம் - ஒன்று
தக்காளி - இரண்டு
பச்சைமிளகாய் - நான்கு
இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
பூண்டு - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சைரசம் - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி - அரைக்கட்டு
வெண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
பன் - நான்கு
உருளைக்கிழங்கின் தோலை சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு அதனுடன் காலிஃப்ளவரை தவிர்த்து மற்ற எல்லாக் காய்களையும் சேர்த்து கொதிக்கும் நீரில் போட்டு நன்கு வேகவைத்து நீரைவடித்து விட்டு ஒன்றும் பாதியுமாக மசித்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாயகன்ற சட்டியில் வெண்ணெய், எண்ணெயை கலந்து ஊற்றி காயவைத்து சோம்பைப் போடவும். தொடர்ந்து வெங்காயம், பச்சைமிளகாயைப் போட்டு நன்கு வறுக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டைப் போட்டு வதக்கி தக்காளியை சேர்த்து நன்கு மையாக வதக்கவும்.
பிறகு காலிஃப்ளவரைப்போட்டு நன்கு வதக்கி அவை வெந்தவுடன் எல்லாத்தூளையும் போட்டு உப்பைச் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
பிறகு மசித்த காய்களைப் போட்டு நன்கு கிளறி கால் கோப்பை நீரை ஊற்றி அனலைக் குறைத்து வைத்து வேகவிடவும்.
மசாலா நன்கு கலந்து கெட்டியாக ஆனதும், எலுமிச்சைரசத்தை தெளித்து கொத்தமல்லியை தூவி கிளறி விட்டு இறக்கி விடவும்.
பிறகு பாவ்/பன்னை இரண்டாக நறுக்கி சூடான தோசைகல்லில் போட்டு சூடாக்கி வெண்ணெயைத் தடவி தயாரித்த மசாலாவை அதன் நடுவில் வைத்து சூடாக பரிமாறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum