Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அம்பலமாகும் மகிந்த அரசு ஊழல்: நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவை மேம்படுத்த நடவடிக்கை

Go down

அம்பலமாகும் மகிந்த அரசு ஊழல்: நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவை மேம்படுத்த நடவடிக்கை  Empty அம்பலமாகும் மகிந்த அரசு ஊழல்: நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவை மேம்படுத்த நடவடிக்கை

Post by oviya Mon May 11, 2015 12:49 pm

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் நடவடிக்கைகள் அனைத்தும் விரைவில் வலுப்படுத்தப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மகிந்த அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகித்த அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் தொடர்பில் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு எதிராக இதுவரை சுமார் 169 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்முறைப்பாடுகளில் 31 பேருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பிலான அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு போதியளவு அதிகாரிகள் இல்லாத காரணத்தினால் மேலும் சில பொலிஸ் அதிகாரிகள் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினை மூடுவதற்கு சில தரப்பினர் முனைந்து வருகின்ற போதிலும், இத்தரப்பினால் நிதி குற்றவியல் விசாரணை பிரிவை மூடிவிட முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமல்லாது கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவு, கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு ஆகியனவற்றில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum